உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

வெள்ளி, 21 ஜனவரி, 2011

அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள்

பள்ளிகள் கல்லூரிகளில் உள்ள வேதியல் ஆய்வுக்கூடங்கள் பார்த்திருப்பீர்களே அது போலத்தான் இன்றைய நவீன சமையலறைகள் மாறி விட்டன. இயற்கை உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டோம். சூப்பர் மார்கெட் ஷெல்ஃப்களில் குவிந்து கிடக்கும் உணவுப்பொருட்கள் எல்லாவற்றிலும் சுவைக்காவும், நிறத்திற்காகவும் , கெடாமல் வைத்திருக்கவும் பலவித ஆபத்தான இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் விளம்பரங்கள் சொல்லும் பச்சைப் பொய்களின் கவர்ச்சியில் மயங்கி வாய்க்குள் அள்ளித் திணித்து கொள்கிறோம். உணவுப்பொருட்களில் உண்டான வியாபாரப் போட்டியின் விளைவு இன்றைக்கு 100% தரமான இயற்கையான உணவு உண்பது என்பது குதிரைக்கொம்பு தான்.
உணவில் சுவை கூட்டும் ரசாயனப்பொருட்களில் எந்த விதமான ஊட்டசத்தும் இல்லை .இவைதேவையற்றது, ஊட்ட சத்து சேர்க்கப்பட்டவை என கூறப்படும் உணவும் உண்மையில் பல இயற்கையான ஊட்ட ச்த்துகள் நீக்கப்பட்டு சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டது தான். பல உணவுப்பொருட்களில் இயற்கையான பொருட்களுக்கு பதில் அது போன்ற சுவை தரும் செயற்கையான சுவையூட்டிகள் மட்டுமே உள்ளன.
வெனிலா கலக்கப்படும் உணவு வகைகளில் பேன்களைக் கொல்ல பயன் படுத்தப்படும் பைப்பர் ஹோல் என்ற இராசயனப் பொருள் சேர்க்கப்படுகிறது.
டின் களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பழங்களில் துணிகளையும் தோல்களையும் கழுவப் பயன்படுத்தப்படும் பென்சி அஸிடெட், எதில் அசிடெட், அமில் அசிடெட் முதலியன சேர்க்கப்படுகின்றன. இது உடலுக்கு அதிகம் கேடானது.
கடைகளில் கிடைக்கும் பலவகை ஆப்பிள் பழங்களின் தோலை நகத்தால் சிறிது நெருடிப்பார்த்தால் அதிலிருந்து மெழுகு உதிர்ந்து வரும். ஆப்பிள் கெடாமல் இருக்க தோலில் மெழுகு தடவி பேக் செய்கிறார்கள். நாம் அதை அப்படியே உண்கிறோம்.
கேக்குகளில் எண்ணெய் உறையவைக்க சோடியம் அலுமினியம் சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெய் உண்பதற்கு ஏற்றது அல்ல. மாவை
வெண்மையாகவும் உப்ப வைக்கவும் பிளீச்சிங் பவுடரும், பிற பவுடர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் உடல் நலத்திற்குத் தீமையே!
வெண்ணெய் நீக்கப்பட்ட பால் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பால் நிறுவனங்கள் கலக்கும் ரசாயனப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க பல வித ஆபத்தான ரசாயன பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கிறார்கள். இதன் விளைவாக நாம் உண்ணும் அரிசி, பருப்பு, காய்கறிகளிலும் கான்சர் ,மலட்டுத்தன்மை உருவாக்கும் பூச்சிமருந்து எச்சங்கள் இருக்கின்றன. பழங்களை பழுக்கவைக்க கூட ரசாயனங்கள் உபயோகிக்கிறார்கள். இயற்கையான பூச்சி ஒழிப்பு முறையில் இயற்கையான உரம் இட்டு வளர்ந்த உணவுப்பொருளே சிறந்தது. இதற்கான திட்டங்களையும் ஊக்குவித்தலகளையும் பயிற்சியையும் அரசு விவசாயிகளுக்கு வழங்கி இயற்கையான உணவு எங்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஜெனெடிக் என்ஜினீயரிங்க் மூலம் பெறப்படும் புது விதமான உணவுப்பொருட்கள் மனித உடலில் உண்டாக்கும் பாதிப்புகளை அறிய பல காலமாகலாம். சரியான ஆராய்ச்சிமுடிவுகளை அறியாமலேயே அவற்றை சந்தைப்படுத்துவது காசு கொடுத்து வாங்கி உண்ணும் மக்கள உடலிலேயே உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சோதனைகளை நிகழ்த்துவதாகிறது.
பொதுவாக உணவுப்பொருளில் சேர்க்கப்படும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சில பொருட்கள்:
பென்சோயேட்ஸ் (Benzoates) : பதனீட்டுப் பொருள். ஆஸ்துமா நோய் உள்ளவர்களிடையே நெஞ்சில் இறுக்கமான உணர்வை ஏற்படுத்தும். தொண்டையில் அரிப்பு அல்லது புண் ஏற்படலாம்.
Butylated hydroxyanisole (BHA), butylated hydroxytoluene (BHT) : காற்றுபுகாமலிருக்க பயன்படுத்தப்படும் பொருள் – பொதுவாக குழந்தை உணவுகள் சுவிங்கம்,தாவர எண்ணெய் ஆகியவற்றை கெடாமல் வைத்திருக்கிறது். இது கான்சர் காரணி மற்றும் சிலரிடையே தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
எப்.டி. & சி (FD & C dyes) : வர்ணங்கள் – இது சிலரிடையே அரிப்பை ஏற்படுத்தலாம். குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தைஏற்படுத்தலாம்.
Monosodium glutamate (MSG) : தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வியர்வை, நெஞ்சில் இறுக்கம், கழுத்துக்குப் பின்னால் எரிச்சல், ஆஸ்துமா நோயாளிகளிடையே அதிக ஆஸ்துமாவை ஏற்படுத்தும். குறிப்பாக விளையாட்டு வீரர்கள் திடீரெனெ இதய நோய் தாக்குதலுக்குள்ளாவதில் இதன் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
நைட்ரேட் (Nitrates) : பதனீட்டுப் பொருள் – தலைவலி.
பாராபென் (Parabents) : பதனீட்டுப் பொருள் – கடுமையான தோல் நோய், வீக்கம் அரிப்பு.
சல்பைட் (Sulfites) : பதனீட்டுப் பொருள் – வைட்டமின் B1 ஐ அழிக்கிறது.நெஞ்சில் இறுக்கம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குறைந்த இரத்த அழுத்தம், பலஹீனம், சிறு அளவு கூட சிலரிடையே ஆஸ்துமா நோயை ஏற்படுத்தும், மோசமாக்கும்.
Propyl Gallate: இது எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருட்கள் கெடாமல் வைத்திருக்க உதவும்.தாவர எண்ணெய், பதப்படுத்தப்பட்டஇறைச்சி, உருளைக்கிழங்கு சிப்ஸ், சிக்கன் சூப் பேஸ் மற்றும் சுவிங் கம் ஆகியவற்றில் பயன் படுத்துகிறார்கள்.-இது புற்று நோய் உருவாக்ககூடும்.
Potassium Bromate:ரொட்டிகளில் சேர்க்கப்படும் இந்தப்பொருள் புற்று நோய் ஏற்ப்படுத்தலாம்.
Aspartame (Equal, NutraSweet): இது டயட் சோடா மற்றும் டயட் உணவுகளில் சர்கரைக்குப்பதில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பு.இது மூளையில் டியூமர் கட்டியை உருவாக்கும் என அறியப்பட்டது. மிக குறைந்த அள்வு உட்கொள்ளுவது கூட lymphomas மற்றும் leukemi நோயை உருவாக்ககூடும்.சிலருக்கு தலைவலி, மந்தம், மனக்குழப்பம் , மத்திய நரம்பு மண்டல பாதிப்பு, மாதவிடாய் பாதிப்பு, கருவில் மூளைப்பாதிப்பு உருவாக்கக்கூடும்.
Neotame:இது Aspartame போன்றது ஆனால் அதை விட அதிக நச்சுடையது.
Acesulfame-K: சர்கரையை விட 200 மடங்கு இனிப்பான இப்பொருள். கேக்குகள், சுவிங்கம், ஜெல்லி, மற்றும் குளிர் பானங்களில் சேர்க்கப்படுகிறது. இது கேன்சர் ,
தைராய்ட் பாதிப்பு உண்டாக்கலாம்.
Olestra: இது ஒரு செயற்க்கைக் கொழுப்பு. உடலால் உறிஞ்சப்படாதது, வயிற்றோட்டம் , வயிற்று வலி போன்ற பல பாதிப்புகளை உண்டாக்கும்.
Sodium Nitrite (Sodium Nitrate):இறைச்சி பதப்படுத்தவதில் உபயோகப்படுகிறது. இது கான்சர் காரணியான nitrosamine ஐ உருவாக்குகிறது.
Hydrogenated Vegetable Oil:இவ்வாறு பதப்படுத்தப்பட்ட தாவர எண்ணெய்கள் trans fat ஐ உருவாக்குகிறது. இது இதய நோய் மற்றும் நீரிழிவுக்கு வழி வகுக்கும்.
Brominated vegetable oil :- பிறவிக்குறைபாடு, உடல் உறுப்பு வளர்ச்சியின்மைக்கு காரணமாகும்.
Blue 1 and Blue 2: குளிர்பானங்கள் மற்ரும் மிட்டாய்களில் உபயோகப்படும் சாயப்பொருள். இது கான்சர் மற்றும் ட்யூமர் உருவாக்ககூடும்.
Red 3:மிட்டாய் மற்றும் செர்ரியில் பயன்படும் வண்ணப்பொருள் இது தைராய்ட் மற்றும் ட்யூமர் உருவாக்கக்கூடும்.
Yellow 6: கேக்குகள்,மிட்டாய்கல்,ஜெல்லிக்கள்,சாசேஜ் ஆகியவற்றில் பயன் படுத்தப்படுகிறது. அட்ரீனல்,சிறுநீரகக்கட்டி, மற்றும் கான்சர் உருவாக்கக் கூடியது.
330 and E330 Citric Acid:இயற்கையான சிட்ரிக் ஆசிட் கெடுதல் இல்லை. ஆனால் செயற்கையாக தயாரிக்கப்படும் சிட்ரிக் ஆசிடில் அதன் தயாரிப்பு முறையின் போது அதிலிருந்து sulfur மற்றும் sulfites முழுமையாக நீக்கப்படா விட்டால் ஆஸ்த்மா, அலர்ஜி உண்டாக வாய்ப்புள்ளது. சிட்ரிக் ஆசிட் கலந்த பானம் அதிகம் அருந்துவது பற்களுக்கு கேடு.
924 & E924 Potassium Bromate (Agent used in Bleaching Flour): நரம்பு மண்டலம், சிறுநீரகம், அஜீரணம், மற்றும் புற்றுநோய்க் காரணி.
407 & E407 Carrageenan (Thickening & Stabilizing Agent) -இவை ஆஸ்த்மா, அல்சர், கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.
Sucralose (Splenda):40%thymus gland ஐ சுருங்கச்செய்வதாக சோதனை முடிவுகள் சொல்கின்றன. சிறுநீரகம் மற்றும் ஈரல் வீக்கம், மற்றும் ஈரலில் சுண்ணாம்பு சத்தை படியச்செய்கிறது. உண்ணத்தகுந்ததல்ல.
கேசரிப் பவுடர் உடல் நலத்திற்கு நல்லதல்ல. வீட்டில் செய்யும் எந்த உணவிலும் நிறத்திற்காக கேசரிப்பவுடர் அல்லது புஷ் பவுடர் சேர்க்காதீர்கள்.
குளிர் பானங்கள் மிட்டாய்களில் சேர்க்கப்படும் பல வித கவர்ச்சியான வண்ணங்கள் புற்று நோய் , மூளைக்கட்டி, தைராய்ட், அட்ரீனல் மற்றும் சிறுநீரக
பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
சாயங்கள்
104 & E104 Quinoline Yellow,
107 & E107 Yellow 2G,
110 & E110 Sunset Yellow,
122 & E122 Azorubine, Carmoisine,
123 & E123 Amaranth,
124 & E124 Ponceau, Brilliant Scarlet,
127 & E127 Erythrosine,
E128 Red 2G,
129 & E129 Allura Red AC,
E131 Patent Blue,
132 & E132 Indigotine, Indigo Carmine
133 & E133 Brilliant Blue
151 & E151 Activated Vegetable Carbons, Brilliant Black
154 Food Brown, Kipper Brown, Brown FK
155 & E155 Chocolate Brown HT, Brown HT
போன்ற சாயப் பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா, புற்று நோய் உருவாக்ககூடும்.
120 & E120 Carmines, Cochineal
142 & E142 Acid Brilliant Green, Green S,
160b & E160b Bixin, Norbixin, Annatto Extracts
போன்ற சாயப் பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி,ஆஸ்த்மா போன்றவற்றை உருவாக்ககூடும்.
143 Fast Green இது ஆஸ்த்மா உருவாக்கும்.
150 & E150 Caramelஇது ஹைப்பர் ஆக்டிவிட்டி உருவாக்கும்.
உணவு பதன ரசாயனங்கள்:
E173 Aluminium -இது ஒரு கான்சர் காரணி
E180 Latol Rubine, Pigment Rubine
210 & E210 Benzoic Acid
250 & E250 Sodium Nitrite
-இவை ஹைப்பர் ஆக்டிவிட்டி,ஆஸ்த்மா,கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.
200 & E200-203 Potassium & Calcium Sorbates ,Sorbic Acid
211 & E211 Sodium Benzoate
220 & E220 Sulphur Dioxide also Sulfur dioxide
E228 Potassium Bisulfite, Potassium Hydrogen Sulfite or Potassium Bisulphite, Potassium Hydrogen Sulphite
280 to 283 Calcium or Potassium or Sodium Propionates, Propionic Acid
319 & E319 TBHQ, Tert Butylhydroquinone
627 & E627 Disodium Guanylate (Flavour Enhancers)
-இவை ஹைப்பர் ஆக்டிவிட்டி,ஆஸ்த்மா போன்றவற்றை உருவாக்ககூடும்.
212 & E212 Potassium Benzoate,
213 & E213 Calcium Benzoate,
E214 Ethyl Para Hydroxybenzonate,
E215 Sodium Ethyl Para Hydroxybenzonate,
216 & E216 Propyl P Hydroxybenzonate, Propylparaben]
E217 Sodium Propyl P Hydroxybenzonate
221 & E221 Sodium Sulfite or Sodium Sulphite
222 Sodium Bisulfite or Sodium Bisulphite
223 & E223 Sodium Metabisulfite or Sodium Metabisulphite
224 & E224 Potassium Metabisulphite or Potassium Metabisulfite
225 & E225 Potassium Sulfite or Potassium Sulphite
E226 Calcium Sulfite or Calcium Sulphite
E227 Calcium Hydrogen Sulphite or Calcium Hydrogen Sulfite
260 & E260 Acetic Acid, Glacial
311 & E311 Octyl Gallate
312 & E312 Dodecyl Gallate
631 & E631 Disodium Inosinate 5 (Flavour Enhancers)
635 & E635 Disodium Ribonucleotides 5 (Flavour Enhancers)
1403 Bleached Starch (Thickenner and Stabiliser)
-இவை ஆஸ்த்மா உருவாக்கும்.
E230 Diphenyl, Biphenyl
E231 Orthophenyl Phenol
E236 Formic Acid
E239 Hexamine, Hexamethylene Tetramine -இவை ஒரு கான்சர் காரணி
249 & E249 Potassium Nitrate
310 & E310 Propyl Gallate -இவை ஆஸ்த்மா,கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.
251 & E251 Sodium Nitrate
252 & E252 Potassium Nitrate- இவை ஹைப்பர் ஆக்டிவிட்டி, கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.
413 & E413 Tragacanth (thickener & Emulsifier)
414 & E414 Acacia Gum (Food Stabilizer)
416 Karaya Gum (Laxative, Food Thickener & Emulsifier)
441 & E441 Gelatine (Food Gelling Agent)
536 & E536 Potassium Ferrocyanide (Anti Caking Agent)
928 & E928 Benzoyl Peroxide (Bleaching Flour and Bread enhancer Agent)
-இது ஆஸ்த்மா உருவாக்ககூடும்.
421 & E421 Mannitol (Artificial Sweetener) – இது ஹைப்பர் ஆக்டிவிட்டி உருவாக்கக் கூடும்.
430 Polyxyethylene Stearate (Emulsifier)
431 Polyxyl Stearate (Emulsifier)
E432 – E435 Polyoxyethylene Sorbitan Monostearate (Emulsifiers Gelling Stabilisers Thickeners Agents)
433 – 436 Polysorbate (Emulsifiers)
466 Sodium CarboxyMethyl Cellulose
507 & E507 Hydrochloric Acid (Hydrolyzing Enhancer & Gelatin Production)
518 & E518 Magnesium Sulphate (Tofu Coagulant)
553 & E553 & E553b Talc (Anti Caking, Filling, Softener, Agent)
903 & E903 Camauba Wax (used in Chewing Gums, Coating and Glazing Agents)
905 & 905 a,b,c Paraffin and Vaseline, White Mineral Oil (Solvents, Coating and Glazing,
Anti Foaming Agents, Lubricant in Chewing Gums)
925 & E925 Chlorine (Agent used in Bleaching Flour, Bread Enhancer and Stabiliser)
926 Chlorine Dioxide (Bleaching Flour and Preservative Agent
950 & E950 Potassium Acesulphame (Sweetener)
952 & E952 Cyclamate and Cyclamic Acid (Sweeteners)
954 & E954 Saccharine (Sweetener)
1202 & E1202 Insoluble Polyvinylpyrrolidone Insoluble (Stabiliser and Clarifying Agent added to Wine, Beer, Pharmaceuticals)
-இவை ஒரு கான்சர் காரணி.
அப்பப்பா …பயங்கரம் ..சில கம்பனிகளின் பொருளாசைக்கு பலியாகி எத்தனை விதமான வடிவத்தில் ரசாயனபொருட்களை நமது உணவில் கலந்து உள்ளே தள்ளுகிறோம். இனியாவது எந்தஉணவுப் பொருள் வாங்கினாலும் அதன் “INGREDIENTS:”அல்லது “CONTAINS:என்று இட்டிருப்பதை ஒருமுறை வாசித்துப் பார்த்துவிட்டு புற்றுநோய் போன்ற பேராபத்துகளை விலைகொடுத்து வாங்க வேண்டுமா? பிள்ளைகளுக்கு தரலாமா?என்றெல்லாம் ஒன்றுக்கு இரண்டு யோசித்து வாங்குங்கள்.
பெரியவர்களைப்போல் குழந்தைகள் உடல் உணவில் கலந்துள்ள இந்த விஷ்ப் பொருட்களை விரைந்து வெளியேற்ற இயலாது.ஆனால் துரதிஸ்ட வசமாக அனேக குழந்தை உணவுகளே விஷம் மலிந்து கிடக்கிறது.
சர்க்ரை, உப்பு , எண்ணெய் அதிக அளவு உட்கொள்வது உண்ணும் மூளையின் இயற்கையான ரசாயன சமநிலையை பாதித்து, உணவில் அதிக ஆர்வம்
உண்டாக்கி அத்தகைய உணவுகளுக்கு அடிமையாக்கிவிடும்.
ஹோட்டல்கள் ,ரெஸ்டாரென்ட்களில் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவும். முடிந்தவரை உணவுப்பொருட்களை அதன் அடிப்படை பொருளாகவே அவ்வப்போது வாங்கி ஃப்ரெஷ் ஆகவே உண்ணுங்கள். அதற்கேற்ப உணவுப் பழக்கத்திலும் மாற்றம் செய்து கொள்ளுங்கள். பணத்தையும் மிச்சப் படுத்துங்கள்.
நன்றி:- தமிழ் குருவி

செவ்வாய், 18 ஜனவரி, 2011

சீரழிக்கும் சிசேரியன்களும சுகமான பிரசவத்திற்கான வழி முறைகளும்.

உலகெங்கும் உள்ள பலக் கோடிக்கணக்கான உயிரினங்கள் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன, சிறிய பூச்சியிருந்து பெரிய யானை போன்ற மிருகம் வரை சுகப்பிரசவம் ஏற்படுகின்றபோது மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள அதிகம் படித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது, சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ன சொல்கிறீர்கள்? என்று மிரட்டும் போது சிசேரியனுக்கு சம்பதிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். டாக்டர்களும் வந்த கணவர் அல்லது உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு சட்ட பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். சட்டம் ஓர் இருட்டறை என்பது இந்த பிரசவ அறைக்கும் பொருந்தும், பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது! காரணம் நாம்தான் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோமே.
அப்படியானால் சிசேரியன் தேவையே இல்லையா? என்று கேட்டால் அதற்கு பதில் இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும், சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்களே. தற்போது டாக்டர்கள் தம் தேவையில்லாத மருந்துகளும் வேறு சில காரணங்களும் சுகபிரசவத்தையே மாற்றுகின்றன.

தேவையில்லாத இரசாயன பொருட்கள்:

கர்ப்பம் ஆனவுடன் டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத்தன்மையை மாற்றிவிடுகின்றது. இரும்புச்சத்து மாத்திரைகள் சுகப்பிரசவத்திற்கு முதல் எதிரி, தேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள், இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லுவதில்லை.
கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்) இயற்கையாக பெரும் முறைகள
கால்சியம் மாத்திரைகள் பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி
இரும்புச் சத்து மாத்திரைகள் பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை
அயோடின் மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள்
குளோரின் உப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம்.
பாஸ்பரஸ் பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள்
மக்னீசியம் பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள்
பொட்டாசியம் வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள்
சோடியம் இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன
குரோமியம், செலினியம், மாங்கனீஸ் எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது.
விட்டமின் ஏ (ரெட்டினால்) மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம்
விட்டமின் டீ (கால்சிடெரால்) கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி
விட்டமின் ஈ (டோகோபெரால்) தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி
விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்) புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய்
விட்டமின் பி 1 (தயாமின்) கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு
விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள்
விட்டமின் பி 3 (நியாசின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை
விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்) ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை)
விட்டமின் போலிக் ஆசிட் ஈரல், முட்டை, கீரைகள்
விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்) ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை
விட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்) நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி

தேவையற்ற கட்டுபாடுகள்:

கர்ப்பம் அடைந்தவுடன் எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானது, சில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. வேலைகள் செய்ய வேண்டாம் என்பது படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள். கிராமங்களில் நாம் பார்த்திருப்போம், கர்ப்பிணி பெண்கள் தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் சுமந்து செல்வதையும், எத்தனையோ மலைப் பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு தலையில் சுமந்து எடுத்துச் செல்வதையும். சந்தோஷமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்! காரணம் புரிகின்றதா?

திட்டமிட்ட சதியா?

பல வருடங்களாக பலதரப்பட்ட மக்களிடம் இந்த விஷயம் பேசபட்டு வருகின்றது, மக்கள் தொகையினை கட்டுபடுத்துவதற்காக இவ்வாறு சிசேரியன் செய்கின்றார்கள் என்று, இரண்டாவது முறை சிசேரியன் செய்யும் போதே குடும்பக் கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள், அவர்களுக்கு சில தவறான ஆலோசனைகளை கூறி, அதிகப்பட்சம் மூன்று சிசேரியன் வரை செய்கின்றார்கள், அதற்கு மேல் சிசேரியன் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி கட்டாய குடும்ப கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள்.


தேவையில்லாத மருத்துவ செயல்கள்: விஞ்ஞான வளர்ச்சியை தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய நடைமுறையாகிவிட்டது. உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில் ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது, இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம். தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத ஸ்கேன், டெஸ்டுகள், மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை எளிதாக்கும். சிசேரியன் செய்வதால் உண்டாகும் நோய்கள்: சிசேரியன் செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல் உடலில் புதிய பிரச்சனைகள், பதிய நோய்கள் உண்டாகும்.
தொப்புளிலிருந்து நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-மாதவிடாய் கோளாறுகள் (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea) அடிக்கடி நிறுநீர் போகுதல், சிறுநீர் கசிவு, படியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் வெளியேறுதல், கர்பப்பை இறங்குதல், அடிவயிறு வீங்கி போகுதல்.
தொப்புளிலிருந்து 0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-வயிற்றுவலி, அதிகமான மாதவிடாய், குடல் இறக்கம், கட்டிகள் உருவாகுதல், கற்பபை இறங்குதல், சீதபேதி, சிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல், வயிற்று போக்கு, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், குடல் வீக்கம், செரிமான கோளாறு, விலாவலி, தொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர வாய்ப்பிருக்கின்றது.
சிசேரியன் செய்த இடத்தை பொருத்து நோய்கள் வரும், இதனால் பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது.
சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்?: கர்ப்பமானவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள், விட்டமின் மாத்திரைகள் வேறு சில தேவையில்லாத மாத்திரைகள், அவசியமில்லா ஓய்வுகள், வேலை செய்யமல் இருப்பது, அவசியமில்லாத ஸ்கேன், அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில் நிறுத்துங்கள்.
கர்ப்பமாக இருக்கும் நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோ? ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ? அதே போன்று இயற்கையான காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான்.
ஆதிவாசிகள், குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான வாழ்க்கை வாழ்கின்றார்கள், சுகப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன், விட்டமின் மாத்திரை, டானிக், டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது.
இனிப்பு நீரும் இரத்த அழுத்தமும்:கர்ப்பமாகும் போது ஆரோக்கியமாகயிருந்து அதன் பிறகு தங்கள் உடலில் சர்க்கரை (Diabetic) அதிகமாகியிருக்குமானால் அதற்காக கவலைபட தேவையில்லை, பிரசவம் ஆனவுடன் அது இயல்பு (Normal) நிலைக்கு வந்து விடும். அதேபோல் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்குமானால் அதற்காக பயப்பட தேவையில்லை, உடலில் எங்கோ பிரச்சனையிருக்கின்றது, அதனை சரிசெய்யவே இரத்த அழுத்தம் உண்டாயிருக்கின்றது. இது தேவையான இரத்த அழுத்தம். சம்பந்தப்பட்ட பிரச்சனை உடலில் சரியானவுடன் இரத்த அழுத்தமும் நார்மல் ஆகிவிடும், சரி செய்ய வேண்டியது உடல் பிரச்சனைகளை இரத்த அழுத்தத்தை அல்ல.
வலி இல்லா சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்:கால் சுண்டுவிரலில் வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து (மஸாஜ்) விட வேண்டும், பிரசவ நேரம் நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும். குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும். சாதாரண நிலையில் 1 அல்லது 2 நிமிடம் கசக்கி விட்டாலே போதும், பிரசவம் சிரமம் என்று தெரிந்தால் அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும்.
பிரசவ நேரத்தில் வலி அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் .
கர்ப்பத்திலிருந்து குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க:
கணவன், மனைவிக்கு சாதாரண நோய்களோ அல்லது தீராத நோய்களோயிருந்தால் அது கர்பத்திலிருக்கும் குழந்தைக்கு பரவாமல் தடுக்கும் சிகிச்சை சீன மருத்துவமான அகுபங்சர் மருத்துவத்தில்தான் இருக்கின்றது. படத்தில் உள்ள குறிபபிட்ட இடத்தில் 3வது மாதத்தில் ஒரு முறை, 6வது மாத்தில் ஒருமுறை விரலால் லேசாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெற்றோர்களின் நோய்கள் குழந்தைக்கு பரவாமல் காப்பாற்றிவிடலாம். உட்புற கணுக்கால் மூட்டுக்கம் குதிகால் எலும்புக்கும் இடையில் உள்ள மத்திய பகுதியிலிருந்து நேர் மேலே உங்கள் ஆட்காட்டி விரல் அளவுபடி 5வது இஞ்ச் (cun) அந்த இடம் அமைந்துள்ளது (பார்க்க படம் ).
ஓர் உண்மையை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள், கர்ப்பமாகும் யாரும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும், காது இப்படி வேண்டும், கை இப்படி வேண்டும், முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி செய்வதும் இல்லை, அதற்காக யாரும் இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லை (நவூதுபில்லாஹ்), எல்லாம் இறையருளால் இயற்கையாக நலமாக அமைகின்றது. அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும், தேவையில்லாத தொல்லைகள், மருந்துகள் கொடுக்கமலிருந்தாலே போதுமானது. எனவே நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நம்மையும் நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிப்போம், அதற்காக பாடுபடுவோம்..வெற்றி பெறுவோம்;..இன்ஷா அல்லாஹ்..

வைட்டமின் மாத்திரைகளின் மறுபக்கங்கள்

ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள் என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டு, அதனை நேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாக இருந்தால் மருத்துவரிடம் சென்று, அய்யா எனது பிள்ளை நோஞ்சானாக இருக்கின்றான் ஏதாவது சத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார். இவரும் தனக்குப் பிடித்தமான? கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார். இவ்வாறாக,
இன்று படித்தவர்களிலிருந்த பாமரன் வரை மயங்கிக் கிடக்கும் பொருட்களில் விட்டமின் மாத்திரைகள் ஒன்று. உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் இதை சாப்பிடத் தயங்குவதில்லை. இந்த மாத்திரைகளை சத்து மாத்திரைகள் என்று அறிந்து கொண்ட மக்களுக்கு, அதன் மறுபக்கத்தைப் பற்றியும், இது ஒரு உலக மகா மோசடி என்பது பற்றியும் அறிய வாய்ப்பில்லை.
இந்த சத்து மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்கிறதா? இதனால் ஏற்படும் கெடுதல்கள் என்ன? என்பதை இனி நாம் பார்ப்போம்.  


ஒன்றை அறிந்து கொள்ளுங்கள்! நமது நாக்கை இறைவன் வெறும் சுவை உணரும் சதையாக மட்டும் படைக்கவில்லை. நாக்கில் படாமல், அதன் உமிழ் நீரில் கலக்காமல் உண்ணக் கூடிய எந்தப் பொருளும் முறையாக ஜீரணிக்கப்படுவதில்லை. முறையாக ஜீரணிக்கப்படாத உணவுச் சத்துக்கள் நேராக கிட்னியைப் பாதிக்கச் செய்கின்றன. இவ்வாறு முறையாக ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அவற்றை நம் உடல் நிராகரித்து விடுகின்றது.
நாக்கில் 9000 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து பெறப்பட்ட சத்துக்களை சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்ட உறுப்புக்கு அனுப்புகிறது. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது. இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து (உமிழ் நீர்கலந்து) நிதானமாகச் சாப்பிடும் போது தான் நடைபெறும். உதாரணமாக பாகற்காயை சாப்பிடுகிறோம். அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன் மூளைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. இந்த தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன் கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைகளுக்குத் தகவல் அனுப்புகிறது.
கசப்பு சுவை தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம், இதய மேல் உறை, சிறுகுடல் ஆகியவைகளாகும்.
எனவே இந்த தகவல் வந்ததும் இந்த உறுப்புக்கள் தயார் நிலையில் இருக்கின்றன. பாகற்காயை நாம் மென்று சுவைத்து சாப்பிட்ட அதன் சத்தை உடனடியாக அவை கிரகித்துக் கொள்கின்றன.
இது போன்றே இனிப்பு சுவையானது வயிறு மற்றும் மண்ணீரலுக்கும் – உவர்ப்பு சுவை சிறுநீரகம், சிறுநீர்ப்பைக்கும் – புளிப்பு சுவை பித்தப்பை, கல்லீரலுக்கும் – கார சுவை நுரையீரல், பெருங்குடலுக்கும் பயன்படுகிறது. மேற்குறிப்பிட்ட உறுப்புகளின் கீழ் செயல்படுபவையே மற்ற உறுப்புக்கள் என்பதையும் வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இனிப்பு சுவை வயிற்றுக்கு சக்தியளிக்கும் என்பதால் இனிப்பைத் தின்பதோ, உப்பு சுவை கிட்னிக்கு சக்தியளிக்கும் என்பதால் நேரடியாக உப்பைத் தின்பதோ, சரியான அணுகுமுறையல்ல.
சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகளும் கலந்து தான் இருக்கின்றன. ஒரு பிடி வெறும் சோற்றை வாயில் இட்டு நன்றாக மென்று பாருங்கள். முதலில் லேசான இனிப்பு சுவை தெரியும். பிறகு சிறிது உவர்ப்பு சுவை தெரியும். நன்றாக மென்று முடித்த பிறகு சப்பென்று ஒரு சுவையும் தெரியாது இருக்கும். இது போன்றே ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகள் கலந்து இருக்கிறது. சில உணவு பொருட்களில் சில சுவை அதிகமாக இருக்கும். உதாரணமாக பாகற்காயில் கசப்பு சுவையும், பழம், தேன் ஆகியவற்றில் இனிப்பு சுவையும்.
நாம் உணவை நன்றாக நிதானமாக சுவைத்துச் சாப்பிடும்போது தான் நாக்கால் சுவை உணரப்பட்டு மூளைக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த சுவை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு சிக்னல் அனுப்பப்பட்டு அவைகள் அந்த சத்தைப் பெறுகின்றன. அப்படியில்லாமல் விரைவாக சாப்பிடும் போது நாக்கின் உணர்வு மொட்டுக்களில் முழுமையாக அந்த உணவு படுவதில்லை. உமிழ்நீரிலும் கலப்பதில்லை. இதனால் நாக்கால் சுவைகளை தெளிவாகப் பிரித்து மூளைக்கு தகவல் தெரிவிக்க முடிவதில்லை. சரியான சிக்னல் கிடைக்காத காரணத்தினால் அந்த உணவின் சத்துக்கள் அனைத்து உறுப்புகளினாலும் நிராகரிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியில்லாமல், கிட்னியைச் சென்று அடைகின்றன. கிட்னியில் ஓரளவே இந்த சத்துக்களைச் சேமிக்க முடியும். அளவைத் தாண்டும் போது கிட்னியும் தொடர்ந்து நிராகரிக்க ஆரம்பித்து விடுகின்றது. இதன் விளைவு தான் உடல் பெறுத்துப் போவது. மேலும் உடலின் பல உறுப்புகள் பலமிழந்து பல வியாதிகள் உருவாகின்றது. அதிகமாக சாப்பிடும் அவைகளை முறையாக சாப்பிடாத காரணத்தால் உடல் பெருக்கின்றது. பல நோய்கள் உருவாகின்றது.
விட்டமின் மாத்திரைகளை நாம் எப்படி சாப்பிடுகின்றோம். இப்போது யோசனை செய்து பாருங்கள்?
வாயில் போட்டு நாக்கில் கூடப் படாமல் விழுங்கி விடுகின்றோம். இந்த மாத்திரைகளை நம் உடல் உறுப்புக்கள் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இந்த மாத்திரைகளால் கிட்னியும்,மண்ணீரல், கல்;லீரல் என்று பாதிக்கப்பட்டு உடல் நோய்களைப் பெற்றுக் கொள்வது தான் மிச்சம்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். விழுங்காமல் மென்று தின்றால் அந்த சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ளுமாவென்று? நாம் உடல் அமைப்பு இரசாயன கலவைகளையும், அதனால் உண்டான செயற்கைச் சுவைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை.
இறை நியதியுடன் சிந்திப்போமானால், படைத்த இறைவனை மடையனாக்கும் முயற்சிதான் விட்டமின் மாத்திரைகள். அந்த அளவற்ற அருளாளன் மனிதனுக்கு தேவையானதை அழகாக படைத்திருக்கின்றான். உதாரணமாக ஆரஞ்சுப் பழம்.
சிறு விதையிலிருந்து வளர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சுவையில்லா மண்ணிலிருந்து சுவையுள்ள ஆரஞ்சுப் பழத்தைத் தருகின்றது. அதன் தோளை உரித்து, அதன் சுளைகளை வாயில் இட்டு சுவைத்துச் சாப்பிடும் போது தான் அதன் உண்மையான சத்துக்கள் கிடைக்கின்றன. விட்டமின் சி மாத்திரைகளாக சாப்பிடும் போது அவைகள் மண்ணுக்குக் கூடப் பயன்படாமல் போகின்றன.
மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (30:41) ஆரோக்கியமான இரண்டு நபர்களிடம் ஒருவரிடம் ஆரஞ்சுப் பழங்களை மட்டும் கொடுத்து ஒரு 3 நாள்கள் ஒரு தனியறையில் வைப்போம். மற்ற ஒருவரிடம் விட்டமின் சி மாத்திரையைக் கொடுத்து அவரையும் தனியறையில் வைப்போம். யார் ஆரோக்கியமாக இருக்கின்றார் என்பதை நான்காவது நாள் பாருங்கள்.
இதே போல் ஒருவரிடம் சாதாரண ரொட்டிகளை மட்டும் கொடுப்போம். மற்றவரிடம் ரொட்டியை விட பல மடங்கு சத்துள்ளதாக கருதப்படும் மல்டிவிட்டமின் மாத்திரைகளைக் கொடுப்போம். நான்காவது நாள் யார் ஆரோக்கியமாக வெளியே வருவார் என்றால், ஆரஞ்சு சாப்பிட்டவரும், சாதாரண ரொட்டி சாப்பிட்டவரும் ஆரோக்கியமாகவும், விட்டமின் சி யையும், மல்ட்டி விட்டமின் சாப்பிட்டவர்கள் ஆரோக்கியத்தை இழந்த நிலையிலும் வெளியே வருவார்கள். விட்டமின் மாத்திரைகளில் உடம்புக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன என்று கூறும் பொழுது, மருத்துவமனைகளில் ஏன் ரொட்டியும், பாலும், வெண்ணையையும் தருகின்றார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது!?
விட்டமின் மாத்திரைகள் தேவையான பலத்தைக் கொடுக்கும் என்றால், இராணுவ வீரர்கள் தங்களது முதுகில் ஏன் சோத்து மூட்டைகளைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும்? இந்த சோத்து மூட்டைகளுக்குப் பதிலாக எடை குறைந்த எளிதில் கொண்டு செல்லக் கூடிய இந்த சத்து மாத்திரைகளைச் சிரமமின்றி கொண்டு செல்ல முடியுமே என ஏன் சிந்திப்பதில்லை?
இந்த மாத்திரைகள் எவ்வளவு தான் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதிக சத்துள்ளவை என்று கூறப்பட்டாலும் தினமும் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டிற்குப் பதிலாக இந்த மாத்திரைகளை உட்கொள்ள முடியுமா?  


விவசாயி வானத்தையும், பூமியையும் மாறி மாறிப் பார்த்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு, உணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டிய தேவையில்லையே!
பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு பிரியாணிப் பொட்டலத்தையும், கஞ்சித் தொட்டியையும் காட்டுவதற்குப் பதிலாக விட்டமின் சத்து மாத்திரைகளை வழங்கி விட்டுப் போகலாமே!
இதற்கெல்லாம் பதில்கள் எங்கும் கிடையாது. விட்டமின்களையும் தாதுப் பொருட்களையும் நாம் உண்ணும் இயற்கையான உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் தன்மையுடனேயே நம் உடல் உறுப்புக்கள் அமையப் பெற்றிருக்கின்றன. நம் உடலே நம் உடலுக்குத் தேவையான சில சத்துக்களைத் தானே தயாரித்துக் கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கின்றது.
உதாரணத்திற்கு மாலை வெயிலில் நம் உடல் விட்டமின் டி யை தயாரித்துக் கொள்கிறது. இதே போல் கல்லீரல், தோல் போன்று மற்ற உறுப்புக்களும் தேவைக்கேற்றபடி செயல்பட்டு விட்டமின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்வதில்லை. அவைகளை புறக்கணித்து வெளித்தள்ளி விடுகின்றன. இப்படி ஒரு வலுவான ஆற்றல் நம் உடலுக்கு இருக்கின்றது. செயற்கை சத்துக்களை அந்நியப் பொருட்களாகக் கருதி கழிவுகளாக நினைத்து, நமது உடல் நிராகரித்து விடுகின்றது.
நிர்ப்பந்தமாக இவைகளை உடலில் செலுத்தும் போது உடல் உறுப்புக்கள் நன்மைக்குப் பதில் தீங்கையே பெற்றுக் கொள்கின்றன, அதன் மூலம் பழுதடைய ஆரம்பிக்கின்றன.
விட்டமின் மாத்திரைகளை மட்டுமல்ல, இதே போன்ற அணுகு முறையில் தயாரிக்கப்படும் சத்து மிக்க பானங்களுக்கான கலவைப் பொடிகள், மற்றும் குழந்தை உணவுகள் என்று பெயரிட்டு விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் இந்த வகையைச் சார்ந்தவையே.
எனவே, சாதாரணமாக இயற்கையான உணவுகளை உண்டு இன்பமாக வாழக் கற்றுக் கொள்வோம். கற்றுக் கொடுப்போம். இதன் மூலம் மருந்தில்லா உலகம் படைத்து மனித நேயம் காப்போம்.

இரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்-Blood Pressure



 
இதயம்: இதற்காக மனிதன் எதையும் இழக்க தயாராகின்றான். அதனால் தானே என்னவோ இன்று பார்க்கும் இடமெல்லாம் ஹார்ட் ஸ்பெசலிஸ்டுகளின் போர்டுகள் தென்படுகின்றன. எந்த பத்திரிக்கையைப் பார்த்தாலும் என் மகனுக்கு ஹார்ட் ஆபரேசன் செய்ய 5 லட்சம் தேவை, உதவி செய்யுங்கள். என் கணவருக்கு ஹார்ட் ஆபரேசன் செய்ய வேண்டும் உதவி செய்யுங்கள் என்று விளம்பரங்கள் வருகின்றன. வரும் விளம்பரங்கள் உண்மை தான் என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை. அவர்களுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள் ஆபரேசன் தான் தீர்வு என்று சொல்கிறார்களே அது தான் உண்மையா?இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
bp     ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் என்று சொல்லிக் கொள்ள தகுதி உள்ளவன் இறைவன் மட்டுமே. 1942-ல் இந்திய மருத்துவ சட்டம் ஸ்பெசலிஸ்ட் என்று யாரும் போர்டு போட கூடாது என்று தடை விதித்தது. இச் சட்டம் இயற்றிய பிறகும் இவர்கள் ஸ்பெசலிஸ்டுகள் என்று போர்டு போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றுவது மன்னிக்க முடியாத குற்றம். அது மட்டுமல்ல அவர்களுக்கு ஆபரேசன் தான் தீர்வு என்று தவறாக வழி காட்டி அவர்களின் பொருளாதாரத்தை நாசம் செய்து குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டுவருவதை மனசாட்சி உள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். ஏழ்மை நிலையில் உள்ள பாமரனிடம் கூட இரக்கமில்லாமல் 5 லட்சம் கொண்டு வா, 10 லட்சம் கொண்டு வா இல்லை என்றால் உன் மகன் இறந்து விடுவான் என்ற அச்சத்தை உண்டாக்கி அவன் உடமைகளை நாசம் செய்து அவனை கடன்காரனாகவும் பிச்சைக்காரனாகவும் மாற்றி ஆபரேசன் வெற்றியடைய வேண்டும், நலம் பெற வேண்டும் என்று வந்தவனை நடைபினமாக மாற்றி வாழ்நாளெல்லாம் மருந்து மாத்திரைகளோடு வாழ்வை நாசம் செய்யும் கொடுமை இந்த நவீன மருத்துவத்தில் தான் உள்ளது.
நம் வீட்டிலோ, நம் தெருவிலோ அல்லது நம் ஊர்களிலோ பலரை இது போல் சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆபரேசன் தான் தீர்வு என்ற டாக்டர்களின் தவறான முடிவை கேட்டு பல லட்சம் பணம் திறட்ட முடியாமல் கதி கலங்கி நிற்கும் எத்தனையோ பேரை நாம் தினமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். வாழ வேண்டிய வயதில் இதயத்தைக் காரணம் காட்டி கணவன், மனைவி இருவரையும் சேரவிடாததால் பல குடும்பங்கள் மவுனமாக அழுவது நம் காதுகளுக்கு கேட்காமலில்லை. இவைகளை பார்க்கும் போதும் கேட்கும் போதும் நம் மணம் தவிக்காமலில்லை. வேறு வழி தெறியாத காரணத்தால் நவீன மருத்துவத்தின் அவலங்களை சகித்துக் கொண்டு வாய் பொத்தி மவுனமாய் நிற்கின்றோம். இனி இந்த நிலை தொடர கூடாது நம் மக்கள் தெளிவடைந்து மாற்று வழிமுறைகளை தெரிந்துக் கொண்டு தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களைப் போன்று நினைக்கும் உங்களில் ஒருவனுடைய முயற்சியே இந்த தொடர். இதய நோயைக் காரணம் காட்டி மோசடி செய்தவர்களின் முகத் திரையை கிழித்து இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களுடைய வாழ்வை வசந்த மாக்கும் முயற்சியே இந்த இதயமே………இதயமே, இன்ஷா அல்லாஹ்.
இதயமே இதயமேஇதயம், இதன் அழகிய துடிப்புகளே உயிருக்கு அறிமுகம். துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம், அதுதான் மரணம். இறைவனின் படைப்புகளில், ஓர் அற்புத தொழிற்சாலை. இதை உச்சரிக்காத உயிரும் இல்லை, பாடாத கவிஞனும் இல்லை.
ஹார்ட் அட்டாக், இரத்த அழுத்தம், நெஞ்சு வலி மற்றும் படபடப்பு இன்னும் இது போன்ற வியாதிகளின் கதாநாயகனே இந்த இதயம் தான். இதில் ஹார்ட் அட்டாக் பற்றி விரிவாக ஆராய்வோம்.
இதயம் அது தானாக இயங்குவதில்லை, உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும் போது அவை தன் நிலையை மூளைக்கு தெரிவிக்க மூளை இதயத்திற்கு உத்தரவிடுகின்றது. இதயம் தன் இரத்த ஓட்டம் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்பிற்கு சக்தி அளித்து அதன் சக்தியை சமநிலைப்படுத்தி உறுப்பை சீராக இயங்க வைக்கின்றது. ஆனால் நவீன மருத்துவம் இதயம் தானாக இயங்குவதாக நினைத்து அதன் வேகத்தைக் குறைக்க மருந்து மாத்திரைகள் கொடுத்து இதயத்தின் இயக்கத்தை கெடுத்துவிடுகின்றனர்.
h     உடல் உறுப்புகளில் முக்கியமானவை இதயம், சிறுகுடல், நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர் பை, பித்தப் பை, கல்லீரல் போன்றவை. இவைகள் மிக முக்கியமானவை. மற்றவைகள் எல்லாம் இந்த உறுப்புகளைச் சார்ந்தவையே. இனி இந்த உறுப்புகள் எவ்வாறு இதயத்தோடு சம்பந்தப்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.நுரையீரல்:நுரையீரல் பாதிப்படைந்து, பாதிப்படைந்த நுரையீரல் அனுப்பும் தகவல் இதயத்திற்கு கிடைக்காமல் போனாலோ, தகவல் கிடைத்து இரத்த ஓட்டத்தை அனுப்பும் போது தடங்கல் ஏற்பட்டாலோ ஏற்படும் அட்டாக் நுரையீரல் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்காகும். இந்த ஹார்ட் அட்டாக் அதிகமாக அதிகாலையிலேயே ஏற்படும். அதுவும் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் ஏற்படும். அதிகாலையில் ஏற்படும் ஹார்ட் அட்டாக் எல்லாம் நுரையீரல் சம்பந்தப்பட்டவைகளாகவே இருக்கும். அதிகாலையில் ஏற்படும் இந்த ஹார்ட் அட்டாக் சில நேரங்களில் வாய் விட்டு சிரிக்கும் போதும், வேகமாக ஓடும் போதும் ஏற்படும். வாய் விட்டு சிரிக்கும் போதும் வேகமாக ஓடும் போதும் நுரையீரலுக்கு அதிகமாக சக்தி தேவைப்படுகின்றது. அதிக சக்தியை இதயத்தால் ஈடு செய்ய முடியாத போது இது போன்ற ஹார்ட் அட்டாக் ஏற்படுகின்றது. நுரையீரல் இதயத்திற்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து அதன் இயக்கத்திற்கு பெரிதும் உதவும் உறுப்பாகும். நுரையீரல் பாதிப்பு பலவிதத்தில் இதயத்தை பாதிக்கவே செய்யும்.
சிகிரெட் புகைப்பவர்களே ஜாக்கிரதை, சிகிரெட் புகைப்பவர்கள் நுரையீரலை பாதிக்கச் செய்து, இதயத்தைக் கெடுத்து தன்னைத் தானே அழித்தும் கொள்கின்றார்கள். நுரையீரலும் பெருங்குடலும் ஜோடி உறுப்புகளாகும். அதாவது காற்று சம்பந்தப்பட்டவை. இது போன்று வரும் ஹார்ட் அட்டாக்குகளை ஒரு திறமையான அகு பங்சர் மருத்துவர் எளிதாக சரியாக்கிவிட முடியும். அதுவும் சில நிமிடங்களில். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா. இதயமும் நுரையீரலும் சந்திக்கும் இடத்தை தேர்வு செய்து சிகிச்சையளிக்கும் போது நோயாளி சில நிமிடங்களில் பூரண நிவாரணம் பெறுவார்.
சிறுநீரகம் சிறுநீர் பை:
நீர் என்னும் மூலப் பொருளோடு சம்பந்தப்பட்ட சிறுநீரகம் பாதிபடைந்து பாதிபடைந்த சிறுநீரகத்தின் தகவலைப் பெற்று சக்தியை சரிப்படுத்த இதயத்தால் இரத்த ஓட்டத்தை அனுப்ப முடியாத போது ஏற்படும் ஹார்ட் அட்டாக் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்காகும். இந்த அட்டாக் சிறுநீர்பை சம்பந்தப்பட்டிருந்தால் மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள்ளும், சிறுநீரகம் சம்பந்தப்பட்டிருந்தால் மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் ஏற்படும். குறிப்பாக மாலை 5 மணிக்கு முன்பும் பின்பும் ஏற்படும். இந்த நேரம் தான் அணைவருக்கும் சிறுநீர் போக தூண்டுதல் அதிகம் உள்ள நேரம். இதயமும் சிறுநீரக சக்தி நாளங்களும் சந்திக்கும் இடத்தை தேர்வு செய்து சிகிச்சையளிக்கும் போது இந்த அட்டாக்கிலிருந்து நோயாளியை உடன் காப்பாற்றிவிடலாம்.
k     சிறுநீரகத்தில் பிரச்சினை உண்டாகும் போதும் சிறுநீரகம் செயல்பட தவறும் போதும் (KIDNEY FAILURE) திழுரென்று இந்த அட்டாக் ஏற்படலாம். அதிகமான மருந்துகளையும், மாத்கிரைகளையும், டானிக் பாட்டில்களையும் கண்ணை மூடி பயன்படுத்தினால் நிச்சயம் சிறுநீரகம் பாதிப்படையும். விரைவாக உணவை உட்கொண்டாலும் சிறுநீரகம் பாதிப்படையும். அக்கு பஞ்சர் மருத்துவம் கிட்னியை மிகவும் பாதுகாக்கின்றது. நவீன மருத்துவம் மருந்து மாத்திரைகளால் சிறுநீரகங்களை மிகவும் பாதிப்படையச் செய்கின்றது. மருந்து மாத்திரை பிரியர்களே எச்சரிக்கை.
கல்லீரல் பித்தப்பை:- சுமார் இரவு 12 மணிக்கு முன்பும் பின்பும் ஏற்படும் ஹார்ட் அட்டாக் அநேகமானவை கல்லீரல் பித்தப்பை சம்பந்தப்பட்டபையாகவே இருக்கும் வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல் போன்றவைகளால் இவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இரவில் குளிர்ந்த நீரை குடித்தாலும் இந்த எரிச்சல் நிற்காது. இவைகள் கல்லீரல், பித்தப்பை பாதிக்கப்பட்டதின் முன்னரிவிப்புகள். நாக்கில் வெண்மை படர்ந்திருக்கும். பித்தப் பையும் கல்லீரலும் மரம் என்னும் மூலப் பொருளைச் சார்ந்தவை. இவையிரண்டும் இணை உறுப்புகள். பித்தப்பை பாதிக்கப்பட்டால் வரும் ஹார்ட் அட்டாக் இரவு 11 முதல் 1 மணிக்குள்ளும் கல்லீரல் பாதிக்கப்பட்டால் வரும் ஹார்ட் அட்டாக் இரவு 1 மணி முதல் 3 மணிக்குள்ளும் வரும். சரியான அக்குபஞ்சர் புள்ளிகளை தேர்ந்தெடுத்து சக்தியை தூண்டும் போது சில நிமிடங்களில் மாயமாய் மறைந்து விடும்.
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்;;. மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க” – அத்தியாயம் 13:28
நடு இரவில் மட்டும் தான் இந்த ஹார்ட் அட்டாக் வரும் என்றில்லை, தூங்காமல் அடிக்கடி கண் விழித்துக் கொண்டிருந்தாலும், பல நாள் தூக்கமில்லாமல் இருப்பவர்களுக்கும் வரும். மதிப்பிற்குறிய நமது குடிகாரர்களுக்கும் வரும். மதுவிற்கு அடிமையானவர்களே இனியாவது எச்சரிக்கையாக இருங்கள். கண் விழித்து T. V. சீரியல் பார்க்கும் சகோதரிகளே கவணம். விடுமுறை நாட்களில் வீடியோ கேசட்டுகளை விடிய விடிய பார்க்கும் சகோதரர்களே கவனம். நமக்காக குடும்பம் காத்திருக்கின்றது. பித்தப்பை, கல்லீரல் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக் நடு இரவில் தான் வரும் என்றாலும் குடிகாரர்களுக்கும் கண் விழிப்பவர்களுக்கும் எந்த நேரத்திலும் வரலாம்.
அப்படி எந்த நேரத்தில் வந்தாலும் சம்பந்தப்பட்டவர் குடிகாரராகவோ, கண்விழித்தவராகவோ இருந்தால் நிச்சயம் அவர் பித்தப்பை கல்லீரல் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்கினாலேயே அவர் பாதிக்கப்ப்டடிருகிகின்றார் என்று உடன் முடிவு செய்து சிகிச்கையளிக்க வேண்டும். உதாரனமாக சொல்ல வேணடுமானால் ஒருவருக்கு மாலை 5 மணிக்கு ஹார்ட் அட்டாக் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். உடனே நாம் மாலை 5 மணி அப்படியானால் இது சிறுநீரக சம்பந்தப்பட்ட ஹார்ட அட்டாக் என்று முடிவு செய்யக் கூடாது. சம்பந்தப்பட்டவரின் குனாதிசயங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் (இது பற்றி விரிவாக வரும் தொடர்களில் பார்ப்போம்).
இதயம் சிறுகுடல்:பிரியமானவர்களுக்காக மிகவும் பிரியமானவர்கள் குளிர்ச்சியாக என் இதயத்தை உனக்கு தருகின்றேன் என்ற வசனங்கள் பேசுவது அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு எதிரானது. இதயம் நெருப்பு என்னும் மூலப் பொருளால் ஆனது. இதன் இனை உறுப்புகளும் சிறுகுடலும் நெருப்பு என்னும் மூலப் பொருளால் ஆனதே. இதயம் தன்னைத் தானே இயக்க சக்தி பெறாமல் போகும் போதும் அல்லது மற்ற உறுப்புகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தினறும் போதும் இதயம் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக் வருகின்றது.
காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் வரும் ஹார்ட் அட்டாக் எல்லாம் இதயம் சம்பந்தப்பட்டவையே (நவீன மருத்துவம் எமர்ஜென்சியை ரெடியாக திறந்து வைத்திருந்து காத்திருக்கும் நேரமும் இது தான்). இதயத்திற்கு சக்தியளிக்கும் புள்ளியை தூண்டும் போது வந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும் இந்த ஹார்ட் அட்டாக்.
வயிறு மண்ணீரல்:சாப்பிட்டுக் கொண்டிருந்தார், திழுரென்று இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டிருப்போம். சாப்பிடும் போது வரும் ஹார்ட் அட்டாக் வயிறு மண்ணீரல் சம்பந்தப்பட்டவையே. காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள் வருவது வயிறு சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக். காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் வருவது மண்ணீரல் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்காகும். பொதுவாக காலை 9 மணிக்கு முன்பும் பின்பும் வருபவை வயிறு சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்கே. வயிறு போதுமான சக்தியோடு இயங்கினால் இந்த அட்டாக் வராது. காலை 7 மணி முதல் 9 மணிக்குள் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடியுங்கள். காலையில் அதிகம் சாப்பிடுங்கள், இரவு சாப்பாட்டை குறையுங்கள். நன்றாக மென்று சாப்பிடுங்கள். காலையில் பட்டினி கிடக்காதீர்கள். காலை உணவே நாள் முழுவதும் உழைப்பதற்கு தேவையான சக்தியை தருகின்றது. எனவே காலை உணவிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். இரவு உறங்குவதற்கு நமக்கு சக்தி தேவையில்லை. அந்த நேரத்தில் அதிகம் சாப்பிடாதீர்கள். வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கும் போது தான் பெட்ரோல்ஃழுசல் தேவை. பயணம் முடிந்து வாகனத்தை நிறுத்தும் போது பெட்ரோல்ஃழுசல் தேவையில்லை. இதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது போன்று கவனத்தை செலுத்தினால் வயிறு சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்கை தவிர்க்கலாம்.
இதுவரை:இதுவரை நாம் ஹார்ட் அட்டடாக் எப்படியெல்லாம் வரும், எப்படிப்பட்டவருக்கு வரும், எந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டால் வரும். எந்தெந்த நேரத்தில் வரும் என்பதையெல்லாம் சுருக்கமாக பார்த்தோம். ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வருகின்றது என்றால் ஓர் உண்மையான அக்குபஞ்சர்
மருத்துவரின் மிக விரைவான நாடி பரிசோதனை மூலம் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை தெரிந்துக் கொண்டு, நபரின் குனாதிசயங்கள் (குடிகாரரா, கண் விழித்தவரா), அப்போதைய சுழ்நிலையை (ஓடிவந்தவரா, சாப்பிட்டுக் கொண்டிருந்தவரா) கவனத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட நேரத்தையும் மனதில் கொண்டு சிகிச்சையளித்தால் விலை மதிக்க முடியாத பல உயிர்களை காப்பாற்றுவதுடன் (இன்ஷா அல்லாஹ்) பல குடும்பங்களை சந்தோரூத்தில் வாழ வைக்கலாம்.
இதில் எதையுமே கவனத்தில் கொள்ளாமல் உடனே E.C.G. எடுத்து I.C.U. வைத்துவிட்டு நிற்கும் டாக்டரிடம் நோயாளியின் நிலையை குடும்பத்தினர் கேட்கும் போது அந்த பொறுப்புள்ள டாக்டர் சொல்லும் பதில் என்ன தெரியுமா?எங்களால் தற்போது ஒன்றும் சொல்ல முடியாது 1 நாள் போக வேண்டும் அல்லது 48 மணி நேரம் கழித்து தான் எதையுமே சொல்ல முடியும். என்ன அறிவு பூர்வமான பதில்? 48 மணி நேரம் கழித்து இவர் என்னத்தை சொல்வது?நாங்களே தெரிந்துக் கொள்கிறோம். உயிரோடு இருக்கின்றார் என்று, இல்லையென்றால், இறந்து விட்டார் என்று.
என்று நாம் ஆங்கிலம் படித்தவன் எல்லாம் அறிவாளி என்று நினைத்தோமே அன்றே நமது சுய சிந்தனையை இழந்து விட்டோம். அதோடு அறிவு பூர்வமான பல நமது சொந்த மருத்துவத்தையும் நாம் மறந்து விட்டோம்.
உண்மையைச் சொன்னால் நவீன மருத்துவத்திற்கு ஹார்ட் அட்டாக்கிற்கான காரணம் எதுவும் தெரியாது. அப்படியானால் சிலர் எப்படி பிழைத்துக் கொள்கிறார்கள் என்கிறீர்களா?அது இவர்கள் செய்யும் டிரீட்மென்டால் அல்ல. உடலே தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்ளும் போது சிலர் இறையருளால் பிழைத்துக் கொள்கிறார்கள். மற்றபடி சிறப்பாக செய்வதெல்லாம் I.C.U-வில் வைத்துவிட்டு அழகாக பில் போடுவது தான்.
வாய்வு தொல்லையால் பாதிக்கப்பட்ட பலருக்கு மூச்சு தினறல், நெஞ்சு எரிச்சல் வரும். E.C.G. எடுத்துப் பார்த்தால் ஹார்ட்டில் பிரச்சினைப் போல் காட்டும். உடனே I.C.U.-வில் சேர்த்துவிடுவார்கள். வாய்வு தொல்லையா (GAS TROUBLE), ஹார்ட் அட்டாக்கா?என்று பகுத்தறிந்து பார்க்கத் தெரியாத ஒரு மருத்துவம் தான் நவீன மருத்துவம்.
Blood Pressure and Body Parts
இரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும
உடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகுமுறைப்படி இரத்த அழுத்தம் என்று நம்பி மாத்திரைகள் சாப்பிடுவதால் எந்த அளவுக்கு உடல் மோசமாகின்றது என்பதை இதற்கு முன்புள்ள தொடர்களில் பார்த்தோம். அப்படி உடல் உறுப்புக்கள் பாதிப்படையும் போது எந்தெந்த உறுப்புக்கள் பாதிப்படைந்தால் என்னென்ன வியாதிகள் வரும் என்பதை சுருக்கமான இந்தத் தொடர்களில் காண்போம். இன்ஷா அல்லாஹ்!
நுரையீரல் (LUNG)
மூச்சுத் திணறல், இருமல், சளி, ஆஸ்துமா, கைகளில் கட்டை விரல் ஆரம்பித்து மார்பு மேல் முடியும் வலி, Frozen Shoulder என்னும் கைகளை அசைக்க முடியாத நிலை (பெண்களுக்கு அதிகம் வரும்), உடம்பில் உள்ள மூடி கொட்டுதல் (தாடி, மீசை, புருவம் உள் உறுப்புக்கள் மார்பகம் அடைத்தது போல் பாரமாக இருப்பது, தொண்டை காய்ந்து போதல், பேச முடியாத நிலை, டான்சில் கோளாறுகள், தோள்பட்டை வலிகள், தோல் வியாதிகள், அலர்ஜி, அக்குள், கழுத்து, தொடை பகுதிகளில் வியர்வை, 3 மணிக்கு வழிப்பு வந்து விடும், தூக்கத்தில் நெஞ்சை அடைப்பது போன்று மூச்சு முட்டுவது போல் இருக்கும், உட்கார்ந்து சாய்ந்தபடி தூங்குவார்கள், கைகளை அகற்றி வைத்து குப்புறப்படுத்துக் கொண்டு தூங்குதல்.
பெருங்குடல் (Large Intentine)
அடிவயிற்றுவலி, மலச்சிக்கல், வயிற்றுப் பொறுமல், பல்வலி, வயிற்றுப் போக்கு, உதடு வறட்சி, நாக்கு வறட்சி, மூச்சுவிடச் சிரமம், தொப்புளைச் சுற்றிலும் வலி, தோல் வியாதிகள், இருமல், மூக்கு வழியாக இரத்தம் கசிதல், முகவாதம், தோள்பட்டை வலி, இடுப்புவலி, சைனஸ், நெஞ்சு எரிச்சல், புட்டமும் இடுப்பும் சேருமிடத்தில் சதை ஏற்படும் இன்னும் பல..
வயிறு (Stomach)
அல்சர், வாய்வுத் தொல்லை, நாக்கு மஞ்சளாக மாறும், பற்களில் இரத்தக் கசிவு, கால் வலி, வாந்தி, முகவாதம், தொண்டை வறட்சி, இரத்தக் கசிவு நோய், கண் கீழ் இமை துடிப்பு, முகத்தில் தோன்றும் நரம்புவலி, வயிற்றுப் பொறுமல், பசியின்மை, கெட்ட கனவுகள், உணவிருந்தும் சாப்பிட முடியாமல் போவது போலவும் கனவுகள் உண்டாகும் இன்னும் பல..
மண்ணீரல் (Spleen)
உடம்பில் அதிக எடை கூடுதல், அடிவயிற்று வலி, நாக்கில் ஏற்படும் விறைப்பு, மற்றும் வலி, வாய்வுகளால் ஏற்படும் வலி, மஞ்சள் காமாலை, வாந்தி, உடல் பலவீனம், உடல் பாரமாகத் தெரிதல், கால் பகுதிகளில் ஏற்படும் வீக்கம், வலி, காலை 10 மணிக்கு தூக்கம் வந்து அசத்தும், சாப்பிட்டவுடன் தூங்கச் சொல்லும் சோம்பேறித்தனத்தைக் கொடுக்கும், தூக்கத்தில் இருமல் வந்து தூக்கத்தைக் கெடுக்கும், இடுப்பில் பக்க வாட்டில் மடிப்புகளுடன் சதை உண்டாகும் இன்னும் பல..
இதயத்தின் மேலுறை (Pericardium)
இதயத்தை தனியாகவும் அதன் மேலுறையை தனியாகவும் கணக்கிட்டு சிகிச்சை அளிக்கும் மருத்துவம் உலகில் ஒன்று தான் இருக்கின்றதென்றால், அது 5000 வருடங்களுக்கு முற்பட்ட அக்குபஞ்சர் மருத்துவமே. அதனால் தான் இதய நோய்களை அக்குபஞ்சர் எளிதாகத் தீர்க்க முடிகின்றது. பைபாஸ் சிகிச்சையைக் கூடத் தேவையற்றதாக்கி விடுகின்றது.
இதயத்தில் மேல்உறை பாதிப்புக்கு உள்ளாகும் போது நெஞ்சுவலி, படபடப்பு, மார்பு நெஞ்சுப் பகுதி அடைத்தது போலிருத்தல், மன அமைதியின்மை, முழங்கையில் ஏற்படும் வலி, உள்ளங்கையில் சூடு பரவுதல், கைகளில் ஏற்படும் தசைவலி, கடுமையான நெஞ்சுவலி, (இதயத் தசைகளில் இரத்தக் கசிவினால் ஏற்படும் நெஞ்சுவலி வலது முழங்கை வரை கடுமையாக இருக்கும்.) தலைவலி, தூங்கும் போது நெஞ்சு பாரமாக இருப்பது போல் உணர்வு, யாரோ அமுக்குவது போன்று உணர்வு இதனால் தூக்கத்தில் எழுந்து விடுதல் இன்னும்பல..
இதயம் (Heart)
நெஞ்சுவலி, இதயத்திற்கு மேல் பகுதி தோள்பட்டை பகுதியில் ஏற்படும் வலி, மாரடைப்பு, போலியோ, அதிகமாக தாகம் எடுத்தல், சிறுநீர் மஞ்சள் நிறம், கை சுண்டு விரலில் உள்பக்க சைடில் ஆரம்பித்து அக்குள் வரை செல்லும் வலி, மஞ்சள் காமாலை, உள்ளங் கையில் சூடு அதிகமாகுதல், மனதில் பயம், நாக்கின் மேல் பகுதி சிகப்பு நிறமாகுதல், ஞாபக சக்தி குறைவு, மார்பு பகுதியில் தோன்றும் புண், மூச்சுவிட சிரமம், திடீர் வியர்வை, தூக்கமின்மை படபடப்பு, மணிக்கட்டு வலி, விரைவாகக் களைப்புத் தோன்றுதல், தூக்கத்தில் தொடர் கனவுகள், தூங்க ஆரம்பித்தவுடன் கனவும் ஆரம்பித்து விடும், நெருப்பு சம்பந்தப்பட்ட கனவுகள் தான் அதிகம் வரும் இன்னும் பல..
மூவெப்ப மண்டலம் (Triple Warmer)
உடம்பில் சில பகுதிகள் சூடாகவும் சில பகுதிகள் குளிர்ச்சியாகவும் இருப்பதற்கு இந்த தான் காரணம். உடம்பு முழுவதும் வெப்பத்தை சீர்படுத்தும் உறுப்பு. இது பாதிப்படைந்தால், காது மந்தம், காது செவிடு, காது இரைச்சல், கண்ணத்தில் வீக்கம், காதுகளில் வலி, முழங்கை வலி, தொண்டை வறட்சி, உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை அல்லது அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சி ஏற்படுதல், தலை மிகவும் சூடாக இருப்பது. ஆடை மூடிய பகுதிகள் சூடாக இருப்பது, வயிறு உப்புதல், காற்று அடைத்தது போல் தசைகளில் வீக்கம், (விரல் கொண்டு அழுத்தினால் பள்ளம் ஏற்படும்), சிறுநீரை அடக்க முடியாமை, தூக்கத்தில் சிறுநீர் கழித்தல், நீர் கடுப்பு, வெளிச்சத்தில் தூங்க இவர்களுக்கு மிகவும் பிடிக்கும், சிறு வெளிச்சம் இவர்களுக்குத் தேவை.
சிறுகுடல (Small Intenstine)
அடிவயிற்று வலி, காது பிரச்னைகள், கன்னம் வீக்கம், தொண்டைப் புண், மலச்சிக்கல், மலத்துடன் இரத்தம், கழுத்தில் சுளுக்கு, வயிறு உப்புசம், வாய்வுத் தொந்தரவு, அடிக்கடி ஏப்பம், வயிறு மந்தம், நெஞ்செரிச்சல், வாயில் புண்கள், வயிறு பெறுத்தல், சிறு குடலில் ஏற்படும் அஜீரணமே கெட்ட வாய்வுக்கு மூலகாரணம். மதியம் சாப்பிட்டவுடன் தூங்க நினைப்பவர்கள், சிறிது நேரமாவது மதியம் சாப்பிட்டவுடன் தூங்கியே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சிறுகுடல் பாதிக்கப்பட்டவர்களே. அக்குள், அக்குள் மடிப்புகளிலும் மார்புப் பக்கவாட்டிலும் இவர்களுக்கு சதை விழும், இன்னும்பல..
பித்தப்பை (Gall Bladder)
அதிகமாகக் கோபம் வரும், ஒரு பக்கத்தலைவலி, கண்களில் எரிச்சல், பித்தப்பையில் கல், வாய்வுப் புண், வாந்தி, வாய் நாற்றம், காதுவலி, அடிக்கடி ஏற்படும் ஜுரம், தொடையில் வெளிப்பக்கத்தில் ஆரம்பித்து கால் சுண்டு விரல் வரை வரும் வலி அதனால் நடக்க இயலாமை, வாயில் கசப்புச் சுவை, கிறுகிறுப்பு, காது அடைத்தல், மசலா அதிகம் சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பை பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்புண்டு, உடம்பில் ஏற்படும் எரிச்சலோடு கூடிய வலி, துணி உடம்பில் பட்டால் கூட எரிச்சல் உண்டாகும். கால் கைகளை படுக்கைக்கு வெளியே நீட்டி விட்டுக் கொண்டு தூங்குவார்கள் இன்னும் பல..
கல்லீரல (Liver)
கண் நோய்கள், பசியின்மை, தலைவலி, கோபம், மஞ்சள் காமாலை, வயிற்றுவலி, மலச்சிக்கல், குழந்தைகளின் வளர்ச்சி பாதித்தல், வாந்தி, மன அழுத்தம், முதுகுவலி, சிறுநீர் பிரியாமை, ஹெரனியா, அடிவயிற்று வலி, இரவு 1 மணிக்கு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு பிறகு 3 மணிக்கு மீண்டும் தூங்க ஆரம்பித்தல், தூக்கத்தில் ஏற்படும் அரிப்பு, அலர்ஜி இன்னும் பல..
சிறுநீர்ப்பை (Urinary Bladder)
சிறுநீர் பிரியாமை, சிறுநீர் அடக்க முடியாமை, இரு கண்களுக்கு நேர்மேல் பக்கமாக ஏற்பட்டு பின்னால் போகும் தலைவலிகள், கண் நோய்கள், இடுப்புவலி, முதுகுவலி, கழுத்துவலி, வேட்கையான மன வலி, சிறுநீர்ப் பையில் கல், முழங்கை வலி, குதிகால் வலி, உடம்பு அசதி, பய உணர்ச்சி, இரண்டு புட்டங்களிலும் அதிகமான சதை போடுதல், தொடைகளின் பின்புறம் அதிக சதை போடுதல், அடிக்கடி மலம் கழித்தல், தூக்கத்தில் மாறி மாறி புரண்டு கொண்டிருத்தல், இவர்களின் கழுத்துக்குப் பின்புறம்சதை போடும் இன்னும் பல..
சிறுநீரகம்  (Kidney)
பயம், சிறுநீரகக் கல், மூட்டு வலி, கால்களில் வீக்கம், முகத்தில் வீக்கம், முகம் கருப்பாக மாறுதல், பிறப்பு உறுப்பில் வலி, பல் வலி, கால் பாதங்கள் சூடாக இருப்பது, முதுகு வலி, நாக்கு உலர்ந்து விடுதல், தொண்டைப் புண், வீக்கம், மலச்சிக்கல், மூச்சுத் திணறல், தசைகள் சுருங்குதல், சிறுநீரகங்களில் ஏற்படும் வலி, தலைமுடி கொட்டுதல், மாதவிடாய்ப் பிரச்னைகள், ஆண்மைக் குறைவு, மனநோய், இரவில் வியர்த்தல், விதைகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம், கர்ப்பப்பை இறங்குதல், டான்சில், மார்பக அழற்சி, கழுத்தில் முன்புறம் சதை போடுதல், மாலை நேரத்தில் 5 மணிக்கு மேல் உடல் சோர்ந்து விடுதல், உடல் மிகவும் பலவீனமாய் மாறுதல், கைகள் நடுக்கம், இவர்கள் குப்புறப்படுத்துத் தான் தூங்குவார்கள். அப்போது தான் இவர்களுக்கு தூக்கம் வரும்.
மேற்குறிப்பிட்ட நோய்கள் மட்டும் தான் ஒவ்வொரு உறுப்பிலும் வரும் ஒன்றில்லை. அதற்க மேலும் உண்டு இருந்தாலும் முக்கியமானவைகள் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டால் சில நோய்கள் வரும், அதே வேளையில் அந்த உறுப்போடு மற்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டால் இருக்கும் நோய் தீவிரமாவதுடன் மேலும் பல புதிய நோய்கள் வரவும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். சில நேரங்களில் நோய் என்னவென்றே கண்டுபிடிக்க முடியாமல் ஆங்கில மருத்துவம் திண்டாடுவது இது போன்ற நேரங்களில் தான்.
பெருங்குடல் பாதிப்பால் இடுப்பு வலி
பெருங்குடல் பாதிப்படையும் போது சில வியாதிகள் வரும். அதே வேளையில் சிறுநீர்ப் பையும் பாதிக்கப்பட்டால் 99 சதவீதம் இடுப்பு வலி வர வாய்ப்பு இருக்கின்றது. இந்த இடுப்பு வலி சிறுகச் சிறுக ஆரம்பித்து இறுதியில் உட்கார முடியாத அளவுக்கு வேதனையைக் கொடுக்கும். இதற்கு ஆங்கில மருத்துவத்தில் டிஸ்க் டிஸ்லோகஷன் அதாவது, டிஸ்க் விலகியதாகக் கூறி அறுவைச் சிகிச்சை செய்யச் சொல்வார்கள். ஆனால் அக்குபஞ்சர் மருத்துவத்தில் பெருங்குடலையும் சிறுநீர்ப்பையையும் சில சிகிச்சை முறைகளில் சரி செய்து, அறுவைச் சிகிச்சைக்கு அவசியமில்லாமல் செய்து விடலாம்.
நுரையீரல் பாதிப்படைந்தால் ஆஸ்துமா
நுரையீரல் பாதிப்படைந்து ஆஸ்துமா உருவாகலாம். இப்படி ஒரே ஒரு ஆஸ்துமா மட்டும் தான் இருக்கின்றது என்று ஆங்கில மருத்துவம் நினைத்து, ஒருவரைக் கூட நலமாக்க இயலாமல் நோயை மட்டுப்படுத்துவதாகக் கூறி பலரின் வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அக்குபஞ்சர் ஆஸ்துமாவை அணுகும் விதமே மிகவும் அழகானது. ஒருவருக்கு.
* மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் ஆஸ்துமா ஆரம்பித்தாலோ அதிகரித்தாலோ அது சிறுநீரகத்தின் சக்தியின்மை காரணத்தினால் ஏற்படும் ஆண்துமாவாகும்.
* காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் ஆஸ்துமா ஆரம்பித்தாலோ அல்லது அதிகரித்தாலோ அது மண்ணீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமாவாகும்.
* அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் ஆரம்பித்தாலோ அல்லது அதிகரித்தாலோ அது நுரையீரல் செயல்பாட்டில் ஏற்பட்ட பாதிப்பால் உண்டான ஆஸ்துமாவாகும்.
இவ்வாறு ஆஸ்துமா எந்த உறுப்பு செயல்பாட்டின் பாதிப்பால் உருவாகின்றது என்பதை நாடி மூலம் கண்டறிந்து சம்பந்தப்பட்ட உறுப்பின் பாதிப்பை சரி செய்வதன் மூலம் ஆஸ்துமாவை நிரந்தரமாக குணப்படுத்த முடிகின்றது. இந்த அணுகுமுறை இல்லாத காரணத்தால் ஆங்கில மருத்துவம் ஆஸ்துமாவை குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று சொல்லிக் கொண்டு காலம் காலமாய் அத்துடன் போராடி பல உயிர்களை வீணடிக்கின்றது. ஆஸ்துமா நோயாளிகளின் சந்தோஷத்தை ஸ்டிராய்டு போன்ற பக்க விளைவுகள் அதிகமுள்ள மருந்துகளை கொடுத்து சாகடிக்கின்றது.நோயின் பெயரை கேட்டு நாம் அச்சப்பட தேவையில்லை. நோய்க்கு பெயர் வைத்தது, யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். வல்லரசு நாடுகள் என்று சொல்லிக் கொண்டு அநியாயங்களை செய்பவர்கள் வைத்த பெயராகக் கூட இருந்து விட்டுப் போகட்டும். அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நோய்க்குக் காரணமான உறுப்பை நாடி மூலம் கண்டறிந்து அதை சரி செய்வதன் மூலம் நோயை நிரந்தரமாக குணமாக்கி மக்களை வாழ வைக்கலாம். இல்லையென்றால் அந்நிய மருத்துவத்தின் அடிப்படையில் உறுப்பைப் பற்றிக் கவலைப்படாமல் நோயைச் சரி செய்வதாகச் சொல்லி அவர்களை நிரந்தர வாடிக்கையாளர்களாக மாற்றி, வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வைத்து மக்களை வீணடிக்கலாம்.5000 வருடங்களுக்கு மேலாக அகுபங்சர் மருத்துவம் கம்பீரமாக நிற்பதின் காரணம் தற்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரம் நோய்களுக்கும் இனி கண்டுபிடிக்கப் போகும் பல ஆயிரம் நோய்களுக்கும் தீர்வு இப்போதே தயார் என்று அடக்கத்துடன் ஆர்ப்பாட்டமில்லாமல் கூறும்; அழகிய மருத்துவம் தான் அகுபங்சர். இறைவன் மனித குலத்துக்கு வழங்கிய மாபெரும் பொக்கிஷம் தான் அகுபங்சர்.

நோய்கள் வரும் வழிகள் ! ! !

 




எந்த ஒரு நோயும் மனிதனை உடனே தாக்குவதில்லை. சிறுக சிறுக தாக்கியப் பிறகே வலுவடைகின்றது. இதன் ஆரம்ப கட்டங்கள் நமக்கு சில சமிக்கைகள் கிடைக்கவே செய்கின்றன. அவைகளை நாம் புரிந்துக் கொண்டால் நோய்க்கான காரணத்தை தெரிந்துக் கொண்டு அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். முதலில் கைகளை எடுத்துக் கொள்வோம். கைகளில் உள்ள ஐந்து விரல்களின் மூலம் ஆறு வகை உறுப்புகளின் இயக்கத்தை தெரிந்துக் கொண்டு நோய்க்கான காரணத்தை விரைவில் ஒரு பைசா செலவில்லாமல் கண்டுபிடித்து விடலாம். நாடி பார்த்து 12 உறுப்புகளின் நோய் அறிவது அக்கு பஞ்சருக்கு இறைவன் அளித்த கலை. இதனால் தான் ஏற்படுவதில்லை இந்த மருத்துவத்தில் நோய் கண்டறிவதின் பிழை. இன்னும் சில வழிகளும் இருக்கின்றது நோய் கண்டறிய. அவைகளில் ஒன்று தான் கை விரல்கள் மூலம் நோய் அறியும் நிலை .
thumb

கை பெருவிரல் (THUMP FINGER)

கை பெருவிரல் வெளிப் பக்க ஓரத்திலிருந்து வலி ஆரம்பித்து நேராக முழங்கை மேல் பக்கம் நடுவில் சென்று பிறகு மேலே வலி முடியுமானால் அல்லது இதற்கு இடை இடையே வலியோ மரமரப்போ இருக்குமானால் இது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.
middle

ஆட்காட்டி விரல்  (INDEX FINGER)

ஆட்காட்டி விரலில் ஆரம்பித்து முழங்கை வெளிப் பக்கமாக நேராக தோள்பட்டை மேல் சென்று மூக்கின் ஓரத்தில் முடியும். இந்த பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.

நடு விரல் (MIDDLE FINGER)

நடு விரல் இதயத்தின் மேல் உறையோடு சம்பந்தப்பட்டது. இதய நோயின் ஆரம்ப கட்டத்தில் அல்லது இதயத்தின் மேல் உறையில் ஏற்படும் பிரச்சினைகள் இந்த விரலில் ஆரம்பித்து உள்ளங் கை பக்கமாக வந்து கையின் நடுவில் நேராக சென்று அக்குளின் மேல் புறம் முடியும். இந்த பாதையில் அல்லது அதற்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் உபாதைகள் அனைத்தும் இதய உறை (PERICARDIUM) பாதிப்பை அறிவுறுத்தும் அறிகுறிகளாகும்.
ring

மோதிர விரல் (RING FINGER)

உடலில் வெப்ப நிலை மாறுபாட்டை அதனால் ஏற்படும் நோயின் அறிகுறிகளை மோதிர விரல் மூலம் அறியலாம். இந்த விரலில் ஆரம்பித்து கையின் பின்புறமாக சென்று தோள் பட்டை மேல் புறமாக காது வழியாக போய் கண் அருகில் முடிகின்றது. இந்த பகுதியல் ஏற்படும் பாதிப்புகளும் இந்த பாதை செல்லும் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்புகளும் உடலில் உஷ்ண நிலையில் கோளாறு உள்ளதையே காட்டுகின்றன.
small

சுண்டு விரல் (SMALL FINGER)

சுண்டு விரல் நகக் கண்ணில் (மோதிர விரல் பக்கம்) வலி ஆரம்பித்து அது உள்ளங் கை பக்கமாக வந்து மணிக்கட்டு ரேகையின் ஓரமாக போய் அக்குலில் முடியுமானால் அது உறுதியாக இதயத்தின் பாதிப்பைக் காட்டுகின்றது. சுண்டு விரல் நகக் கண் வெளிப் பக்கம் ஆரம்பித்து மணிக் கட்டு ஓரமாக போய் முழங் கை கீழாக சென்று தோள்பட்டையின் பின் பக்கமாக போய் காதின் ஓரத்தில் முடியும் பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சிறு குடல் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும்.
கவனம்சுண்டு விரலில் ஏற்படும் வலியின் போதும் நடு விரலில் ஏற்படும் வலியின் போதும் அலட்சியமாக இருப்பது இதயத்தையும் இதயத்தின் மேல் உறையையும் மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதயத்தில் முதலில் பிரச்சினை வரும் போது அது நடு விரல் பாதையில் தான் அதிகமாக அறிகுறிகள் தென்படும். அதன் பிறகே சுண்டு விரல் பக்கம் வலி ஏற்படும்.
சரிதானா?நாம் இப்போது சிந்திப்போமானால் இது வரை நாம் செய்த செயல்கள் எந்த அளவுக்கு புறம்பானவை என்று அறியும் போது நமக்கே ஆச்சரியமாகவும் வெட்கமாகவும் தோன்றும். ஆம் கை வலிகளுக்கு இத்தனை காரணங்கள் இருக்க இவை எதனையுமே கருத்தில் கொள்ளாமல் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டது ஆச்சரியமானது ஒன்று மட்டுமல்ல மிக மிக அலட்சியமான ஒன்று. இப்படி மாத்திரை சாப்பிடுவதன் மூலம் சாப்பிடுபவர்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணம் கிடைக்குமே ஒழிய நோய் (வலி) மீண்டும் மீண்டும் வந்துக் கொண்டேயிருக்கும்.மாத்திரை சாப்பிட்டால் மீண்டும் தற்காலிக சுகம் கிடைக்கும், அதே நேரத்தில் உள் பக்கமாக நோய் வளர்ந்துக் கொண்டே இருக்கும். நோய்க்கான காரணம் கண்டறியப் பட்டு அது சரி செய்யப்படாத வரை நோயிலிருந்து பூரண சுகம் என்பது கற்பனையே.நடப்பதென்னவலி ஏற்படும் போது நீங்கள் மதிப்பு மரியாதையுடன் பணம் கொடுத்து வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் வலியை நீக்குவதில்லை. அதற்கு பதிலாக வலிக்கின்றது என்ற செய்தி செல்கள் மூலமாக மூளைக்கு எட்டுவதை தடுத்துவிடுகின்றது (மேலும் விவரத்திற்கு மூளைக்கு சுய அறிவில்லை என்ற முந்தைய தொடரை படியுங்கள்), அதனால் நமக்கு வலி தெரிவதில்லை.
உதாரணம்:நம் உடலில் ஓர் ஆபரேஷன் செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம், மயக்க ஊசி போடாமல் செய்ய முடியுமா? முடியாது காரணம் வலியை தாங்க முடியாது, அதே நேரத்தில் ஆப்பரேஷன் செய்யும் பகுதியில் மயக்க ஊசி போட்டுவிட்டு செய்யும் போது ஆபரேசனை அவன் கண்கள் பார்க்கின்றன. ஆனால் வலி தெரிவதில்லை. எப்படி?
மயக்க ஊசி போட்டதால் அந்த பகுதி செல்கள் தற்காலிகமாக செயல் இழக்க செய்யப்படுகின்றன. அவைகளால் பாதிப்பின் செய்திகளை மூளைக்கு தெரிவிக்க முடிவதில்லை. அதனால் வலியை உணர முடிவதில்லை. வலி நிவாரண மாத்திரைகள் இதே அடிப்படையில் செய்யப்படுபவைகளே.

 



                                                     கல்லீரல் (LIVER)

 

இங்கு  கால் விரல்கள் மூலம் எந்தெந்த உறுப்பின் பாதிப்பு நிலைகளை அறியலாம் என்பதை பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.மண்ணீரல் (SPLEEN) கல்லீரல் (LIVER), வயிறு (STOMACH), பித்தப்பை (GALL BLADER), சிறுநீர்பை (URINARY BLADER), சிறுநீரகம் (KIDNEY). இந்த உறுப்புக்கள் அனைத்தின் சக்தி பாதைகளும் கால் வழியே செல்கின்றன. இந்த உறுப்புக்கள் அனைத்ததும் ஆரோக்கியமாக இருந்தால் நமது கால்களும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும், நாமும் கவிதை பாடும் கால்களுக்கு சொந்தக் காரர்களாக இருப்போம்.

மண்ணீரல் (SPLEEN)

 

கால் பெரு விரலின் நகத்தின் வெளிப் பக்க ஓரத்தில் ஆரம்பித்து உள்ளங் கால் வெள்ளை நிறமும் புறங்கால் (பாதத்தின் மேல் பகுதி) நிறமும் சேரும் பாதை வழியாக கனுக்கால் பக்கமாக மேல்நோக்கி தொப்புளிலிருந்து 4 இன்ச் தூரத்தில் செல்லும் இந்த சக்தி பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் மண்ணீரல் சம்பந்தப்பட்டவை.
கால் பெருவிரல் நகத்தின் மேல் பகுதியின் தோலும் நகமும் சேரும் மையப் பகுதியில் ஆரம்பித்து காலில் உள் பக்க ஓரமாக, முழங்கால் ஓரமாக சென்று மார்பு காம்புக்கு கீழே முடிகின்றது. இந்த பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் எல்லாம் கல்லீரல் சார்ந்தவையாகும்.

வயிறு (STOMACH)

கால் பெருவிரலுக்கு பக்கத்து விரலின் நகத்து ஓரத்தில் முடிவடையும் இந்த சக்தி ஓட்ட பாதை காலில் புறங்கால் பக்கமாக கால் எலும்பை ஒட்டி முழங்கால் வெளிப்பக்க வழியாக செல்கின்றது. கண் கீழ் இமை மைய பகுதியில் ஆரம்பிக்கின்றது இந்த சக்தி ஓட்டம். இந்த பாதை செல்லும் பகுதியில் ஏற்படும் அனைத்து நோயின் அறிகுறிகளும் வயிறு சம்பந்தப்பட்டவைகளாக இருக்கும். அதிகமானோர் இந்த சக்தி ஓட்ட பாதையில் ஏற்படும் பிரச்சினையில் பாதிக்கப்படுகின்றனர்.

பித்தப்பை (Gall Bladder)

கண்ணின் ஓரத்தில் ஆரம்பிக்கும் இந்த சக்தி ஓட்ட பாதை தலையில் சைடில் ஒரு வட்டமடித்து வயிற்று பகுதி வழியாக கீழிறங்கி வெளிப்பக்க தொடை மைய பகுதி வழியாக முழங்கால் வெளிப்பக்க ஓரமாக வந்து பிறகு கால் வெளிப்பக்க மைய பகுதி வழியாக சென்று கால் சுன்டு விரல் பக்கத்து விரலின் நகத்து ஓரத்தில் முடிவடைகின்றது. இந்த பகுதியில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த பித்தப்பை சக்தி ஓட்ட பாதையில் ஏற்படும் தடங்களே காரனமாகும். ஒற்றை தலைவலிக்கு கதாநாயகனே இந்த சக்தி ஓட்ட பாதை தான்.மசாலா பொருட்களை அதிகம் சாப்பிட்டால் இந்த பாதையில் அதிகம் பாதிப்பு ஏற்படும். இரவு 11 மணிக்கு தூங்காமல் விழித்திருந்தாலும் இந்த பாதையில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதையில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே.

சிறுநீர் பை (URINARY BLADER)

“நீர் இன்றி அமையாது உலகு”
“சிறுநீர் பை சக்தியின்றி ஆரோக்கியமாகாது உடம்பு”
ஆம்,உடல் முழுவதும் பரவியிருக்கும் ஒரு மாபெரும் சக்தி ஓட்ட பாதை. ஏகப்பட்ட புள்ளிகளை தன்னகத்தே கொண்டு அழகாக ஆட்சி செய்யும் சக்தி ஓட்ட பாதை கண்ணின் ஓரமும் மூக்கின் ஓரமும் சந்திக்கும் இடத்தில் ஆரம்பித்து முதுகு பகுதியில் பரவி கால் கீழ் பகுதி வழியாக சென்று சுன்டு விரல் ஓரத்தில் முடிவடைகின்றது.கால் பின்பக்க பகுதியில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் முழங்கால், முழங்கால் கீழ் ஏற்படும் பிரச்சினைகளும் தொடை பின்பக்கம் ஏற்படும் பிரச்சினைகளும் இந்த சக்தி ஓட்ட பாதையைச் சார்ந்தது. BACK PAIN இடுப்பு வழியின் துயரத்தை துடைத்து எறியும் ஓர் அற்புத பாதை. உடம்பில் எங்கெல்லாம் சூடு, எரிச்சல் ஏற்படுகின்றதோ உடனே நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு முடிவு செய்துக் கொள்ளலாம் அது சிறுநீர் பைக்கும் அது சம்பந்தப்பட்ட உறுப்புக்கும் அல்லது சம்பந்தப்பட்ட பகுதிக்கு தொடர்பு இல்லை என்று.
கண் எரிச்சல், தலையில் சூடு, வயிற்று எரிச்சல் (மற்றவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து வரும் வயிற்று எரிச்சலுக்கு சிறுநீர் பை காரணமாகாது), பாதத்தில் சூடு இன்னும் எங்கெல்லாம் உடம்பில் வெப்பம் எரிச்சல் உண்டாகின்றதோ அதற்கெல்லாம் காரணம் இந்த சிறுநீர் பைதான்.

சிறுநீரகம் (KIDNEY)

கால் பெரு விரல் எலும்பும் பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் உள்ளங்கால் பகுதியில் சிறுபள்ளமான இடத்தில் ஆரம்பிக்கின்றது இந்த சிறுநீரகத்தின் சக்தி ஓட்டம். பிறகு கனுக்காலுக்கு சற்று முன்பாக பெரு விரல் பக்கம் மேலேறி கனுக்கால் முழிக்கும் வெளிப் பக்கத்துக்கும் இடைப்பட்ட பகுதி வழியாக மேலேறி கால் உள் பக்கமாக சென்று தொப்புளை ஒட்டி மேல் நோக்கி போய் நெஞ்சு பகுதியில் முடிகின்றது. இந்த பகுதியில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சிறுநீரகம் சம்பந்தப்பட்டவையாகும். அதிவேகமாக சாப்பிடும் அனைவரும் சிறுநீரகத்துக்கு ஆபத்தையே உருவாக்குகின்றார்கள். எந்த அளவிற்கு வேகமாக சாப்பிடுகின்றீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் சிறுநீரகத்தை பாதிப்படையச் செய்கின்றீர்கள் (பார்க்க: விட்டமின் மாத்திரையின் மறுபக்கம் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுரைகள்).கால் வலி என்றால் நாம் கவனிக்க வேண்டிய உறுப்புக்கள் இத்தனை இருக்க (மண்ணீரல், கல்லீரல், வயிறு, பித்த பை, சிறுநீர் பை மற்றும் சிறுநீரகம்) இவை அனைத்தையும் விட்டு விட்டு இவைகளில் எந்த உறுப்பு பாதிப்படைந்தால் இந்த கால் வலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, பாதத்தில் வலி இன்னும் பிற வலிகள் வந்திருக்கின்றது என்பதை கண்டறிந்து சரி செய்யாமல் மருந்துகள் வாங்கி சாப்பிடுவது, மசாஜ் கிரீம் வாங்கி தேய்ப்பது, வலி நிவாரனி எண்ணெய் வாங்கி தேய்ப்பது என்பது நோயை தீர்க்காது. தற்காலிக சுகத்தை வேண்டுமானால் தரலாம். தேய்த்துவிடுபவர் எதிர்மறையாக இருந்தால் சுகம் கொஞ்சம் கூடலாம்.
மற்றபடி நோய் தீராது. அது உள் நோக்கி வளர்ந்துக் கொண்டே இருக்கும். கால் முட்டியில் பிரச்சினை என்றால் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து சரி செய்து விட்டால் கால் முட்டியின் பிரச்சினை நிரந்தரமாக சரியாகும். அதை விட்டு விட்டு கால் முட்டியை மாற்றச் சொல்வது, நோயை விட்டு விட்டு நோயால் ஏற்பட்ட விளைவை மட்டும் சரி செய்வதாகும். நோயின் மூலத்தை சரி செய்யாமல் நோயின் விளைவை சரி செய்துவிட்டு நோய் குணமாகிவிட்டது என்று கூறும் உலக மகா அறிவாளிகள் வாழும் காலத்தில் நாம் வாழ்வதற்காக நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.
வயதான நபருக்கு முட்டியை மாற்றுகின்றீர்கள் வளரும் ஒரு 8 வயது சிறுவன் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு முழங்கால் முட்டியில் பிரச்சினை என்றால் என்ன செய்வீர்கள். அவன் வளர வளர 6 மாதத்திற்கு ஒரு முறை முட்டியை மாற்ற முடியுமா?