உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

வியாழன், 19 பிப்ரவரி, 2015

அக்குபங்ச்சர் மருத்துவம்



              நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே தான் இருக்கிறது. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவம்.
இயற்கைச் சக்திகள் இணைந்த ஒரு மருத்துவ முறைதான் அக்குபங்சர். இரத்த ஓடுபாதைகள், அக்குப்புள்ளிகள், ஊசிகள், அடைப்புகள், தூண்டுதல்கள், நீடிலிங், பிரபஞ்ச உயிர்ச்சக்தி என மற்ற மருத்துவ முறைகளில் இருந்து 'வித்தியாசப்படும்' இந்த மருத்துவம், உண்மையாகவே மக்களுக்குக் கிடைத்திருக்கும் சிறந்த மருந்தில்லா மருத்துவம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நம்  பழமையான மருத்துவ முறைகள் பின்தங்கிப் போனதற்கும் நம்மிடம் இருந்து மறைந்து போனதற்கும் முக்கியமான காரணம் தன்னையும் தன்பரம்பரையும் தவிர வேறுயாருக்கும்தெரியக்கூடாது என்று மறைத்து வைத்ததுதான். ஒவ்வொரு தாத்தாக்களும் தன் மகன்களிடமும், பேரன்களிடமும் மட்டும்தான் இந்த மருத்துவக்குறிப்புகளை கொடுத்ததால்தான் காலப்போக்கில் மறைந்தது. இதனால் தான் நம் அறிய மருத்துவக் குறிப்புகள் ()றைந்து போயிற்று. ஆனால், அந்த காலத்து மருத்துவ முன்னோடிகளாக இருந்த எகிப்தியர்கள்,  எல்லாக் குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டதால் இன்றளவும் அது நமக்கு உதவுகிறது.
அக்குபஞ்சர் மருத்தவம் இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பலபேர் இன்றைக்கு ஆபரேஷன் இல்லாமல் பல சிக்கல்களை இந்த அக்குபஞ்சர் முறையில் தங்களை குணப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
மருந்து மாத்திரையிலும், ஆபரேஷன் பண்ணியும் குணமாகக்கூடிய வியாதி ஒரு சின்ன ஊசியினால் குணமாகிவிடும் என்று, நாம் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். நியாயமான சந்தேகம்தான்!
நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவமுறையின் சாராம்சம்.
நம் உடம்பிலுள்ள எல்லா பாகங்களிலும், ஒவ்வொரு உறுப்புக்கான அக்குபஞ்சர் புள்ளிகள் உண்டு. அந்த அக்குபஞ்சர் புள்ளிகளிருக்கும் சரியான இடத்தில், ஊசிகுத்தப்படும்போது, அந்தந்த உறுப்புக்கான புள்ளிகள் தூண்டப்படும்.
அக்குபங்சர் மருத்துவம் என்பது பழங்காலத்திலிருந்து சீனாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 5,000 வருடங்களுக்கு முன்பு "ஹூவாங்-டி" என்ற சீன மன்னரால் அக்குபஞ்ச்சர் முறையாக தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது என்றாலும் இந்த மருத்துவமுறை வெளியுலகிற்க்கு தெரியாமல் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பின்பு அமெரிக்க அதிபர் நிக்ஸன் அவர்கள் சீனாவிற்கு சென்றபொழுது அவருக்கு அப்பெண்டிஸால் ஏற்பட்ட தொந்தரவு அக்குபங்சர் நிபுணரால் சில விநாடிகளில் சரி செய்யப்பட்டது. இதனால் எல்லா நாட்டு மக்களுக்கும் அக்குபங்சர் மீது ஆர்வத்தை உண்டு பண்ணியது. பிறகு வெளிநாட்டினர் சீனா சென்று மறைமுகமாக அக்குபங்சர் கற்று பிறகு அதன்மூலம் எல்லா நாடுகளுக்கும் பரவ செய்தனர். அக்குபங்சர் என்றால் நமது உடலிலுள்ள சக்தி ஒட்ட பாதையில் மெல்லிய ஊசி கொண்டு நோயை தீர்க்கும் சிகிச்சைக்கு அக்குபங்சர் என்று பெயர் ஆகோஸ் என்றால் ஊசி பஞ்சர் என்றால் குத்துதல்.
அக்குபங்சர் ஊசி என்பது மிக மெல்லிய ரோமத்தின் அளலிலானது. மேலும் இந்த ஊசியை உடம்பில் இலேசாக செருகினாலே போதும். எனவே வலி மிகமிக குறைவாகவே இருக்கும்.
மருந்தில்லாத இந்த ஊசி எப்படி நோயை நீக்கும் என்றால் நமது உடம்பில் முக்கியமான உறுப்புகளுக்கு தனித்தனியாக உயிர் சக்தி ஒட்டபாதை உள்ளது. இந்த பாதையில் ஏற்பட்ட சக்தி தடையினை நாடி மூலம் அறிந்து மூலம் பிரபஞ்ச சக்தியை சக்தி ஓட்டப்பாதையில் செலுத்தினால் எல்லா நோய்களும் நீங்கும். தற்போது சீனா உள்பட எல்லா நாடுகளிலும் அக்குபங்சர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எந்த விதமான மருந்து, மாத்திரைகள் இல்லாமல் மெல்லிய ஊசிய கொண்டு உடலில் தோலின் மேற்புரம் உள்ள அக்குபங்சர் புள்ளிகளில் லேசாக செருகும்போது அனைத்து நோய்களும் நீங்குகிறது. நாடி பார்த்து மிக சரியான புள்ளியை தேர்ந்தெடுத்து ஊசிபோடும் போது மிக விரைவான பலனை தரும்.
எந்த பக்க விளைவுகள் இல்லாத இம்மருத்துவ முறை 50 வருடங்களாக இந்தியாவிலும் பிரபலமாகியுள்ளது. சென்னை, மதுரையில் மட்டும் ஒருநாளைக்கு சுமார் 1,000 நோயாளிகள் அக்குபங்ச்சர் வைத்தியம் செய்து கொண்டு நோய் நீங்கி செல்கின்றனர்.

அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் சர்க்கரை நோய் குணமாகுமா?

முதலில் சர்க்கரை நோய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டால்தான் - அதற்கு சிகிச்சை உண்டு என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

நவீன மருத்துவம் சர்க்கரை நோய்க்கான அடிப்படைக் காரணம் - கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் பற்றாக்குறைதான் என்று கூறுகிறது. இவ்வளவு சுரப்பு திடீரென குறைய என்ன காரணம்? அதுவும் நம் உடல் முழுவதும் பலவகையான சுரப்புக்கள் ஒழுங்காக இருக்கும் போது அந்த ஒரே ஒரு சுரப்பு மட்டும் ஏன் திடீரென குறைகிறது? முன்பு லட்சத்தில் ஒருவருக்கு வந்த கொண்டிருந்த சர்க்கரை நோய் இப்போது உலகையே பயமுறுத்தும் ஆட்கொல்லி நோயாக எப்படி மாறியது? இந்த கேள்விகளுக்கெல்லாம் நவீன மருத்துவத்தின் ஒரே பதில் - இன்னும் ஆராய்ச்சி முடியவில்லை என்பது மட்டும் தான்.

சர்க்கரை நோய்க்கான அடிப்படை காரணத்தையும், அதற்கான சிகிச்சையையும் மிக எளிதாக முன் வைக்கிறது அக்குபஞ்சர்.

நம் முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் ஜீரண உறுப்புக்களின் இயக்கக் குறைவு காரணமாக, செரிமானத்தின் இறுதி எரிப்பொருளான குளுக்கோஸ் தரம் குறைந்ததாக கிடைக்கிறது. எப்படி கொழுப்பில் தரம் குறைந்த, தரம் கூடிய வகைகள் உள்ளனவோ அதே போல குளுக்கோஸிலும் இருவகைகள் உள்ளன. இப்படி செரிமானம் மூலம் கிடைக்கக் கூடிய குளுக்கோஸின் தரம் தான் இன்சுலின் சுரப்பின் அளவை தீர்மானிக்கிறது. பாதி அளவே தரம் உள்ள குளுக்கோஸ் செரிமானத்தில் கிடைக்குமானால் வழக்கமாக சுரக்கும் இன்சுலின் அளவு பாதியாக குறையும், தரம் குறைந்த குளுக்கோஸ் தொடர்ந்து உற்பத்தியாகுமானால் இன்சுலின் அளவு குறைந்து கொண்டே போகும். தரம் குறைந்த குளுக்கோஸ் இரத்தத்திலிருந்து சிறுநீராக பிரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. அதிகப்படியான தரம் குறைந்த குளுக்கோஸ் உருவாகும் போது அதிகப்படியான சிறுநீர் வெளியேறும். இந்த நிலையில் அதிகமான பசியும், உடல் மெலிவும் ஏற்படும். உடலில் இருந்து சிறுநீராக வெளியேறும் தரம் குறைந்த குளுக்கோஸை செயற்கையாக மருந்து மாத்திரை மூலம் உடலிலேயே அடக்கி வைக்க முயன்றால் சிறுநீரகம் படிப்படியாக செயலிழக்கும்.

சர்க்கரை நோய்க்கு அடிப்படைக் காரணமே இரத்தத்தில் உள்ள தரம் குறைந்த குளுக்கோஸின் பெருக்கம் தான். இதை அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தி, சீர் செய்தால் தரம் குறைந்த குளுக்கோஸ் சிறுநீர் மூலம் முழுமையாக வெளியேறும். உடலிற்கு தேவையான தரம் உயர்ந்த குளுக்கோஸ் கிடைக்கும். இன்சுலின் சுரப்பு தானாகவே அதிகரித்து உடல் நலம் திரும்பி விடும்.

நன்றி : ஹெல்த் டைம்