உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

எண்டோஸ்கோபி என்றால் என்ன?

எண்டோஸ்கோபி என்பது தொண்டை குழி, உணவுக்குழாய், வயிறு, டியோடினம் எனப்படும் சிறுகுடலின் முன்பகுதியை உள்நோக்கும் பரிசோதனையாகும். இது லென்சின் மூலம் ஒளியினை பயன்படுத்தி எடுக்கப்படும் படத்தை வீடியோ மானிட்டர் மூலம் பார்த்து சிகிச்சை அளிக்க உதவும் கருவியாகும்.

இதன் மூலம் வயிற்றுக்குள்ளிருக்கும் புண், சதை வளர்ச்சி, கட்டிகள், ரத்த கசிவு, குமட்டல், போன்ற பிரச்னைகளின் காரணத்தை கண்டறிய முடியும். குடல் மற்றும் இரைப்பை குழாயில் ஏற்படும் ரத்த கசிவை கண்டறியவும் இப்பரிசோதனை பயன்படுகிறது. இந்த பரிசோதனையின் மூலம் வயிற்றினுள் இருக்கும் பிரச்னைகள் மருத்துவர் மற்றும் நோயாளிகள் வீடியோ மானிட்டர் மூலம் பார்க்க முடியும்.

சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது நோயாளிகளுக்கு குமட்டல் வர வாய்ப்புள்ளதா?

அதற்காக தொண்டை பகுதியில் ஸ்பிரே அல்லது மருந்து அளித்து மரத்துப்போக செய்வதின் மூலம் குமட்டல், வாந்தி வராமல் தடுக்கலாம்.

இக்கருவியின் அளவு பெரிதாக இருக்குமா?

இல்லை, நவீன கருவி தொண்டைக்குள் போகும் அளவிற்கு மிகவும் சிறியதாக இருக்கும்.

இக்கருவி பயன்படுத்தும் பொழுது தொண்டை மற்றும் குடல் பகுதியின் பக்கவாட்டில் பாதிப்பு ஏதேனும் ஏற்படாதா?

இக்குருவி மிகவும் சிறியதாக இருக்கும். சிறப்பு பயிற்சியும் அனுபவம் வாய்ந்த, திறமை மிக்க மருத்துவரால் இச்சிகிச்சை மேற்கொள்வதால் பாதிப்பு ஏதும் இருக்காது.

இக்கருவியால் வயிற்றினுள் எவ்வளவு ஆழத்திற்கு பார்த்து சிகிச்சை அளிக்க முடியும்?

பல்லில் இருந்து வயிற்றினுள் 100 செ.மீ ஆழம் வரை பார்க்கலாம்.

கொலோனோஸ்கோபி என்றால் என்ன?

கொலோனோஸ்கோபி என்பது ஆசனவாய் வழியாக பெருங்குடல் மற்றும் மலக்குடலில் உள்ளிருக்கும் பிரச்னைகளை வீடியோ மானிட்டர் மூலமாக பார்த்து சிகிச்சையளிக்க பயன்படும் கருவியாகும்.

எண்டோஸ்கோபி சிகிச்சைக்கு முன் ஏதேனும் உணவு உட்கொள்ளலாமா?

எண்டோஸ்கோபி சிகிச்சைக்கு முன் இரவு வயிறை காலியாக வைத்து காலையில் வெறு வயிற்றுடன் வரவேண்டும்.

எண்டோஸ்கோபி மூலம் வேறு எதற்கு சிகிச்சையளிக்க முடியும்?

சிறு குழந்தைகள் சில சமயங்களில் நாணயம், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வாயில் வைத்து விளையாடும் பொழுது தொண்டையிலோ அல்லது குடல் பகுதிகளில் சிக்கிக்கொள்ளும். அந்த சமயங்களில் எண்டோஸ்கோபி சிக்கியுள்ள பொருளை எளிதாக எடுக்க பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பெரியவர்களும் சில சமயங்களில் உணவு உட்கொள்ளும்போது தொண்டையிலோ அல்லது உணவுக்குழாயில் சிக்கிக்கொள்ள நேரிடும். அந்த சமயங்களில் எண்டோஸ்கோபி மூலமாக எளிதாக சிகிச்சை அளிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக